தமிழ் இனப்படுகொலை பல தசாப்தங்களாக நிகழ்ந்துள்ளதுடன், தற்போதும் தொடர்கிறது: ஆஸ்திரேலிய செனட்டர் குற்றச்சாட்டு

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய செனட் சபையில் (நாடாளுமன்ற மேலவை) உரையாற்றிய ஆஸ்திரேலிய செனட்டர் டேவிட் சூபிரிட்ஜ், ஆயுத மோதலின் இறுதிக்கட்ட மாதங்களில் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட “கொடூரமான குற்றங்களை” உலகம் இன்றும் நினைவுகூருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

செனட் சபையில் தொடர்ந்து உரையாற்றிய சூபிரிட்ஜ், “பாதுகாப்பு வலயம் என அழைக்கப்பட்ட பகுதிக்குள் சுமார் 300,000 மக்கள் முடக்கப்பட்டு, அவர்கள் மீது தொடர்ச்சியான குண்டுவீச்சுகளும் பீரங்கித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இனப்படுகொலையானது 2009 ஆம் ஆண்டில் ஒரேயொரு நாளில் மட்டும் நடந்து முடிந்துவிடவில்லை. அது பல தசாப்தங்களாக நிகழ்ந்துள்ளதுடன், தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து இந்த ஆண்டுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இக்கோரத்தாண்டவத்தின் போது மதிப்பிடப்பட்ட 169,769 தமிழ் மக்கள் எவ்விதத் தகவல்களுமின்றி காணாமல் ஆக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆயுத மோதலின் இறுதிக்கட்ட மாதங்களில், இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராகச் சட்டவிரோதக் கொலைகள், கட்டாயக் காணாமல் ஆக்குதல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பாலியல் வன்முறைகளை இழைத்ததுடன், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளையும் திட்டமிட்டு மறுத்திருந்தது.

வட, கிழக்குத் தாயகத்திலும் உலகெங்கிலும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களினாலும் மே மாதம் 18 ஆம் திகதி ‘தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்’ (Tamil Genocide Remembrance Day) ஆகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்