தாயிடமிருந்து சேய்க்குப் பரவும் எச்.ஐ.வி, சிபிலிஸ், ஹெபடைடிஸ் பி நோய்கள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

யிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி, சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகிய மூன்று நோய்களும் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் “3 வகை நோய்கள் ஒழிப்பு” தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மற்றும் அதன் இலக்குகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (15) கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் வைத்திய நிபுணர் திலங்க ரூவான் பத்திரன, இலங்கையிலிருந்து இந்த 3 வகை நோய்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்திருந்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்கனவே எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஆகிய நோய்கள் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதனுடன் ‘ஹெபடைடிஸ் பி’ நோயையும் இணைத்து, மூன்று நோய்களையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்துவதே இந்த ‘3 வகை நோய்கள் ஒழிப்பு’ திட்டத்தின் நோக்கமாகும். அதற்கமைய, ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் உள்ள அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் வழமையான எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் பரிசோதனைகளுடன் மேலதிகமாக ‘ஹெபடைடிஸ் பி’ பரிசோதனையும் கட்டாயமாக முன்னெடுக்கப்படும். நாட்டில் ஹெபடைடிஸ் பி நோயின் தாக்கமானது 1 சதவீதத்துக்கும் குறைவாகவே காணப்படுகிறது.

உலக சுகாதார ஸ்தாபனமும் 2024 ஆம் ஆண்டில் இலங்கையை இந்நோயைக் கட்டுப்படுத்திய நாடாக அங்கீகரித்துள்ளது. இருப்பினும், இதனை முழுமையாகக் கட்டுப்படுத்திய நாடாக மாறுவதே எமது இலக்கு. ஒரு கர்ப்பிணித் தாய்க்கு இந்நோய் இருப்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், அவருக்கு முறையான சிகிச்சைகளை வழங்குவதன் மூலமும் பிறக்கும் குழந்தைக்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும். குழந்தை பிறந்த 24 மணித்தியாலங்களுக்குள் ‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசியை வழங்குவதன் மூலமும் குழந்தைக்கும் இந்நோய் பரவுவதைத் தடுத்து, ஆரோக்கியமான எதிர்காலச் சந்ததியை உருவாக்க முடியும்.

ஆகையால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தப் பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து, தரவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் 2028 ஆம் ஆண்டளவில் இலங்கையை இந்த மூன்று நோய்களும் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதை முழுமையாகக் கட்டுப்படுத்திய நாடாக உலக சுகாதார நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார்களும் அரசாங்கத்தினால் இலவசமாக முன்னெடுக்கப்படும் இந்தப் பரிசோதனைகளுக்குத் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்

spo

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

July 28, 2026

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக

YQIVVADQMVALHP6FFWJKTJMBMI

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

July 28, 2026

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில்

Arrest

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

July 28, 2026

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை,

rain cana

ஜி.டி.ஏ (GTA) பகுதியில் 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம்

July 28, 2026

டொராண்டோ நகரில் இன்று இரவு கனமழையும் இடியுடன் கூடிய புயலும் வீசக்கூடும் என்பதால், ‘டொராண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரசபை’

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக

756724618_1047290304383453_223524354740937400_n

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து ஒருவர் பலி சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்.

July 27, 2026

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் விநாயகபுரம் 01 பிரதான வீதியில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று

suresh11

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு; நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

July 27, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு

SPHU2A42SZGE7MVH4PDL2ITFMY

காணாமல் போன கால்கரி சிறுவன் பார்க்கர் வெல்ஸ் கடத்தப்படவில்லை; காவல்துறை தகவல்

July 27, 2026

11 வயதான பார்க்கர் வெல்ஸைக் கண்டறிவதற்கு வேறு என்னென்ன வழிமுறைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது குறித்து கனடாவின் காணாமல் போன குழந்தைகளுக்கான

NJBRXZLYK5F3BKA4TRRZ2H2UBA

பிஃபா உலகக் கோப்பை போட்டிகளைத் தொடர்ந்து கனடாவில்  பலர்அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பம்

July 27, 2026

2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளுக்காக கனடாவுக்குப் பயணம் செய்த பலர் நபர்கள், போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில்

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி