மழையுடனான வானிலை; அனர்த்தங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அனர்த்தங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பு (10) இன்று இடம்பெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர,

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண் மேடுகள் இன்னும் அப்படியே காணப்படுவதாகவும், மண்சரிவு காரணமாக பெரிய மற்றும் நடுத்தர அளவிலான கற்கள் மேலெழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனால் மிகக் குறைந்த மழையின் போது கூட, அந்தக் கற்கள் மீண்டும் சரிந்து விழக்கூடிய அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.

முன்பு மண்சரிவு அபாயம் இருந்து தற்போது செயலிழந்துள்ள இடங்கள் கூட, இனிவரும் மழைவீழ்ச்சியுடன் மீண்டும் அபாய நிலையாக மாறக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதைக் கருத்திற்கொண்டு, முதலாம் கட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவு, மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் ஆய்வியல் பிரிவின் பிரதம பொறியியலாளர் சாமர யாபா ஆராச்சி கருத்துத் தெரிவிக்கையில், வானிலை அவதானிப்பு நிலையத்தின் தகவல்களுக்கு அமைய ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்துத் திணைக்களம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

தற்போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வசமுள்ள 9 பிரதான நீர்த்தேக்கங்களும், 5 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய மழையினால் ஆறுகளின் நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்துள்ள போதிலும், அவை இன்னும் அபாயக் கட்டத்தை எட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், கிரிந்தி ஓயா, வலவை, தெதுரு ஓயா, மல்வத்து ஓயா, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அந்தப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை அனர்த்த முகாமைத்துவ பிரிவானது 25 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருவதால், கடந்த 8-ஆம் திகதி அனைத்து மாவட்டப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இது குறித்துக் கூறுகையில், தற்போது சமூக அடிப்படையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, நீர்நிலைகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

மண்சரிவுக்கான அறிகுறிகள் குறித்து மக்கள் எப்போதும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், ஏதேனும் அவசரத் தேவைகள் இருப்பின் அனர்த்த மேலாண்மைப் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 117 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

arrest

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

May 14, 2026

காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாகாண வருமான

Raj

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் அம்பமாகும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரங்கள்…

May 14, 2026

தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு

Shani

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம்

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம்

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்