சென்னை:
தமிழகத்தில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டை குறித்துத் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி, அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 118 இடங்கள் என்ற பெரும்பான்மை பலம் இல்லாமல் எவரையும் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
பேட்டியில் ஆளுநர் கூறுகையில், “மைனாரிட்டி அரசு அமைந்து அதன் பிறகு குதிரை பேரம் நடப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுப் பட்டியலை விஜய் என்னிடம் வழங்கினால், அவரை ஆட்சி அமைக்க அழைக்க நான் தயார். அவரிடம் பெரும்பான்மை இல்லாதபோது நான் எப்படி அழைக்க முடியும்? இது விஜய்க்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே உள்ள பிரச்சினை. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் இந்த இழுபறி நீடித்தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பேன். சட்டப்படி திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால், அதற்கும் சாத்தியம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ‘எஸ்.ஆர். பொம்மை’ வழக்கின் தீர்ப்பு தற்போதைய சூழலுக்குப் பொருந்தாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆளுநரின் இந்த வெளிப்படையான பேச்சு, தமிழகத்தில் தவெக அல்லாத மாற்று ஆட்சி அமையுமா அல்லது ஆளுநர் ஆட்சி அமலாகுமா என்ற விவாதத்தை வலுப்படுத்தியுள்ளது.
#TNGovernor #Arlekar #Vijay #TVK #DMK #ADMK #BreakingNews #May7 #TamilNaduPolitics #MajorityTest #PoliticalCrisis #VijayAsCM #ThalapathyVijay #NewEraTN #ConstitutionalLaw #AssemblyUpdate #StalinVsVijay #EPS #TNElectionResults2026 #VijayMakkalIyakkam_“`