இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது அரசு மேற்கொண்டு வரும் தடை உத்தரவுகளுக்கு எதிராக, எதிர்ப்பைப் பதிவு செய்யவும், படைப்புச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் மாபெரும் கண்டனப் போராட்டங்கள் நாளை 26.04.2026 காலை முன்னெடுக்கப்படவுள்ளன.
கிளிநொச்சி- கந்தசுவாமி ஆலய முன்றல் மற்றும் யாழ்ப்பாணம் – மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நாளை 26.04.2026 காலை 10 மணிக்கு இக் கண்டனப்போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
அறிவின் மீதான இத்தடை, ஒரு சமூகத்தின் சிந்தனை மரபின் மீதான தாக்குதலாகும். இந்த அநீதிக்கு எதிராக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடைபெறவுள்ளன எனவே இப்போராட்டத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கட்சி, அரசியல் பேதங்களைக் கடந்து, கருத்துச் சுதந்திரத்தைக் காக்க இப்போராட்டத்தில் திரளாகக் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.