முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவில் அமைச்சர் மாத்திரம் தவறு செய்யவில்லை, ஒட்டுமொத்த அரசாங்கமும் அமைச்சரவையுமே தவறு செய்துள்ளது. அதனால் இந்நாட்டின் சட்டம், பாரம்பரியம் மற்றும் மக்களுக்கு இருக்கும் கடப்பாடுகளுக்கு மதிப்பளித்து, முழு அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (23) கூட்டு எதிர்க்கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு மோசடியில் அமைச்சரை மாத்திரம் பலிகொடுத்துவிட்டு, அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து ஒருபோதும் தப்பித்துக்கொள்ள முடியாது. இது ஒரு மிகப்பெரிய மோசடித் திட்டமாகும். இவற்றில் எதனையும் தனித்துச் செய்வதற்கு அமைச்சருக்குத் திறமையோ அல்லது அதிகாரமோ இருக்கவில்லை. இவை அனைத்திற்கும் அரசாங்கத்தின் முழுமையான பங்களிப்பு இருந்தது.

அரசாங்கத்தின் பூரண பங்கேற்பின் காரணமாகவே, இந்த பாரிய மோசடியை படிப்படியாக முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. இவற்றை அமைச்சரால் தனித்துச் செய்திருக்கவே முடியாது. ஏனெனில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல. கடந்த காலங்களில் நிலக்கரி விநியோகம் தொடர்பாக எவ்வித அனுபவமும் அந்த நிறுவனத்திற்கு இருக்கவில்லை. இவ்வாறானதொரு நிறுவனத்தைத் தெரிவு செய்து, இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை வழங்கியதன் பொறுப்பை அமைச்சரின் மீது மட்டும் சுமத்துவது எந்த வகையிலும் நியாயமற்றது. முழு அரசாங்கமும் ஒன்றிணைந்து, அனுமதி வழங்கி, ஒரு கூட்டு வேலைத்திட்டமாகவே இதனைச் செய்திருக்கிறது..

மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் போது அதற்கு சட்டமா அதிபரின் எந்தவொரு அனுமதியும் கிடைத்திருக்கவில்லை. இந்நாட்டு மக்களின் பணத்துடன் நேரடியாகத் தொடர்புடைய இந்தப் பாரிய கொடுக்கல் வாங்கலில், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் அல்லது அனுமதியின்றி அரசாங்கம் இறங்கியது. இதனை அமைச்சரால் தனித்துச் செய்ய முடியுமா? இதற்காக அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு அமைச்சருக்கு இருந்தது. அந்தப் பலத்தைப் பயன்படுத்தியே அமைச்சர் இதனைச் செய்தார்.

அத்துடன் நிலக்கரியின் தர பரிசோதனைக்கு என ஒரு ஆய்வுகூடம் உள்ளது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஆய்வுகூடத்திற்கு அது தொடர்பாக எந்தவொரு தகுதியும் இருக்கவில்லை. அந்த ஆய்வுகூடம் வழங்கிய சான்றிதழ் ஒரு சதம் கூடப் பெறுமதியற்றது. அப்படியென்றால், அந்த வேலைத்திட்டம் சரியானது என அனுமதித்துவிட்டு, அதன் முழுப் பொறுப்பையும் தற்போது அமைச்சரின் மீது சுமத்த முடியுமா? அதனால் இதன் பொறுப்பை அமைச்சர் மட்டுமல்ல, முழு அரசாங்கமும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும்

அத்துடன் அரசாங்கம் கொண்டுவந்த 12 கப்பல்களில் இருந்த நிலக்கரிகளும் தரம் குறைந்ததாகும். ஏற்கனவே இருந்த ஒப்பந்த்திற்கு அமைய அந்த தரம்குறைந்த நிலக்கரி கப்பல்களை முழுமையக நிராகரிக்க முடியுமாகி இருந்தது. கொண்டுவந்திருப்பது வாக்குறுதியளித்த தரம் கூடிய நிலக்கரி அல்ல. அதனால் ஒப்பந்தம் முற்றாக மீறப்பட்டிருக்கிறது. நிலக்கரியை நிராகரிப்பதற்கான பூரண உரிமை அரசாங்கத்துக்கும் இருந்தபோதும் அரசாங்கம் வேண்டுமென்றே அதனை செய்யவில்லை.

இது முற்றாக அமைச்சரின் பொறுப்புக்கு கீழ் இருக்கிறன விடயமா? அவ்வாறு இல்லைை. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் எடு்த்துப்பார்த்தால், இதற்கு அமைச்சருக்கு மாத்திரம் பொறுப்புக்களை சுமத்தி அரசாங்கத்தில் இருக்கும் ஏனைய அனைவரும் நல்லவர்களாகி தங்களின் கைகளை கழுவிக்கொள்ள முடியுமா?

உண்மையில் இதனை ஆய்வு செய்து பார்த்தால், . அமைச்சர் தனது பொதுப் பொறுப்பின் அடிப்படையில் இந்தத் தீர்மானங்களை எடுத்து, இந்த மாபெரும் மோசடியில் பங்காளியாகியுள்ளார். இந்த மோசடியானது, மத்திய வங்கி பிணைமுறி மோசடி அளவை விட மூன்று மடங்குக்கும் அதிகமானதாகும். இவ்வாறானதொரு பாரிய மோசடியைச் செய்வதற்குத் திட்டமிட்டு, பெரியதொரு வரைபை உருவாக்கி இதில் இறங்கியது அமைச்சர் மாத்திரம் அல்ல; அமைச்சர் வெறும் கருவி மாத்திரமே. ஒட்டுமொத்த அரசாங்கமும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

அமைச்சரிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு, மற்றவர்கள் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒருபோதும் முடியாது. இதன் பொறுப்பு முழு அமைச்சரவையையும் சாரும். இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள ஒரு அடிப்படைத் தத்துவம் தான், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு. அதுமட்டுமல்லாமல், உயர் நீதிமன்றத்தின் வலுவான தீர்ப்பு ஒன்றும் உள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படை பொது மக்கள் நம்பிக்கை என்பதாகும்.

எனவே, அமைச்சர் பதவி விலகுவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்பதை நாம் மிகத் தெளிவாகக் கூறுகிறோம். அது இதன் முடிவல்ல. இது எவ்வகையிலும் முடிவடையப்போவதில்லை. முழு அமைச்சரவையும் இதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலகும் போதே இது முடிவுக்கு வரும். அதனால் இந்த மாபெரும் மோசடியின் பொறுப்பை முழு அமைச்சரவையும் ஏற்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். தற்போது அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால்தான் அவர் பதவி விலகினார். அமைச்சர் மாத்திரம் தவறு செய்யவில்லை, ஒட்டுமொத்த அரசாங்கமும், ஒட்டுமொத்த அமைச்சரவையுமே தவறு செய்துள்ளது.

எனவே, இந்நாட்டின் சட்டம், பாரம்பரியம் மற்றும் மக்களுக்கு இருக்கும் கடப்பாடுகளுக்கு மதிப்பளித்து, முழு அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அது செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அவ்வாறு செய்யப்படாவிட்டால், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது எதிர்கால அரசாங்கம் ஒன்றின் கடமையாகும் என்றார்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை