அழுத்தம் கொடுத்த சீனா; ஒப்புக்கொண்ட ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்காவின் உச்சகட்டத் தாக்குதலுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் தயாராகி வந்த நிலையில், ஈரான் நிர்வாகத்துடன் தாங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாக இரு சீன உயரதிகாரிகள் ஏ.பி.செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

அதாவது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு சீனா பின்னணியில் இருந்து செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு மாதத்திற்கும் மேலாக மத்திய கிழக்கில் நடைபெற்று வந்த ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர், தற்போது 02 வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போர் நிறுத்தம் தொடர்பாக 10 அம்ச கோரிக்கைகளை ஈரான் அமெரிக்காவிடம் முன் வைத்துள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் பட்சத்தில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்தத்திற்கு சீனா பின்னணியில் இருந்து செயல்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, ஈரான் மீது உச்சகட்டத் தாக்குதலுக்கு ட்ரம்ப் தயாராகி வந்த நிலையில், ஈரான் நிர்வாகத்துடன் தாங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாக இரு சீனா தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை படைபலம் கொண்டு வலுக்கட்டாயமாக திறக்கவழி செய்யும் ஐ.நா. தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கு இணங்குமாறு ஈரானுக்கு சீனா அழுத்தம் கொடுத்ததாக தானும் அறிந்ததாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பு ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தான் மூலமாகவும் சீனா சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது. ஈரானும் சீனாவும் நெடுங்காலமாகவே ஆழமான நட்புகொண்ட நாடுகள். சீனா தனக்கு தேவையான கச்சா எண்ணெய்யின் பெரும்பகுதியை ஈரானில் இருந்துதான் வாங்குகிறது.

ஈரானில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் சீனா பெரிய அளவில் உதவியுள்ளது. அதேபோன்று, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை ஈரான் சமாளிக்க சீனா மிகப்பெரிய அளவில் உதவி வந்தமை குறிப்பிடத்தக்கது.

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்