நிலுவையிலுள்ள வரிகளை அறவிட நடவடிக்கை

மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவையிலுள்ள வரிகளை அறவிட நடவடிக்கை
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தத் தவறிய சுங்க வரி நிலுவைகளை அறவிடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தத் தவறிய சுங்க வரிகளை அறவிடுவதற்கு உத்தரவிடுமாறு கோரி, சமூக ஆர்வலர் சஞ்சய மஹவத்த என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விடயம் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் சில நிறுவனங்களின் வரி நிலுவைத் தொகை மேலும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, 2020ஆம் ஆண்டில் டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் வரி நிலுவை 1.29 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 1.6 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிறுவனங்களுக்கு உண்மையாகவே வரி செலுத்தும் எண்ணம் இருந்திருந்தால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, பிரதிவாதியான டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரசிக் சரூக், தனது கட்சிக்காரர்களின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அனைத்து வங்கிக் கணக்குகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவை வரிகளை அறவிடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகள் தொடர்பான சத்தியக்கடதாசி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சில நிறுவனங்களின் உற்பத்தி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த தலைமை நீதியரசர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம், மனுவை மீண்டும் மார்ச் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் இவ்விடயத்தின் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறு தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்தது.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை