பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திட்டமிட்ட நிதி நிவாரணம் அறிவித்தது போன்றே வழங்கப்பட வேண்டும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை மீறாது அவற்றை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள நிதி நிவாரணப்பொதி மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவை அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம். அனர்த்த முகாமைத்துவத்துக்காக வேண்டியளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள போதிலும், அது குறித்த எந்தவொரு சுற்று நிரூபமும் வெளியிடப்படவில்லை. எனவே வழங்கிய வாக்குறுதிகளை மீறாது அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்காகவும் எதிர்காலத்தில் எமது ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என நாம் உறுதியளிக்கின்றோம். மக்களைப் போன்றே பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர வர்த்தக சமூகத்தினருக்கும் திறைசேரியூடாக வட்டியற்ற கடன் வழங்கப்பட வேண்டும்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். அளர்த்த முகாமைத்துவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது அனர்த்தத்துக்கு பிந்திய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இந்த அரசாங்கம் தவறியுள்ளது.

வெள்ளம் வழிந்தோடிய பிரதேசங்களில் அவற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் கூட முறையாக முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் பிரதி அமைச்சரொருவர் எதிர்க்கட்சியினருக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறுகின்றார். அந்த பிரதி அமைச்சர் இன்னும் தன்னை எதிர்க்கட்சி எம்.பி. என நினைத்துக் கொண்டிருக்கின்றார். அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.

உட்கட்டமைப்பு சேதங்கள் மாத்திரம் 900 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான நிதி இன்னும் கிடைக்கவில்லை என்றே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. 1000 மில்லியன் ரூபா நிதி சேகரிப்பிற்கான திட்டமிடல்களை இதற்கு முன்னரே நாம் சமரப்பித்திருக்கின்றோம். இப்போதாவது அதனை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

By C.G.Prashanthan

Nirmala-Sitharaman-Ali-Sabry

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) உதவி கிடைக்க இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய முக்கிய பங்கு: அலி சப்ரி வெளிப்படுத்திய தகவல்

August 26, 2026

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இந்திய நிதியமைச்சர்

nanda

இலங்கைப் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை நெருங்குகிறது: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க

August 26, 2026

2022-ஆம் ஆண்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரம் வேகமான மீட்சியடைந்து மீண்டும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை

Namal-750x422

இணையவழி துஷ்பிரயோக அமைப்புகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவை: நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்

August 26, 2026

இணையவழி துஷ்பிரயோக அமைப்புகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவை: நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல் வாட்ஸ்அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook) மற்றும்

sajith 5

எல் நினோ – லான் நினா காலநிலை மாற்றத்திற்கு எதிராக தேசிய தயார்நிலை தேவை: சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

August 26, 2026

மாறிவரும் எல் நினோ – லான் நினா (El Niño–La Niña) காலநிலை சுழற்சியால் ஏற்படக்கூடிய தீவிர பாதிப்புகளை எதிர்கொள்ள

Suresh Salley Arrested-828580

முன்னாள் புலனாய்வுத் தலைவர் சாலே விசாரணைக்கு இடையூறு விளைவித்து தகவல்களை மறைத்துள்ளார்: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தகவல்

August 26, 2026

சாலே (Suresh Salley) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத்

canada export

டிரம்ப் – கனடா வர்த்தக மோதல் தீவிரமடைதல்: உலகளாவிய தாக்கம்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் கனடியப் பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள வர்த்தக மோதல், வட அமெரிக்க

P_4790484658

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழகம் முழுவதும் 29-ஆம் தேதி சிறப்பு முகாம்!

August 26, 2026

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரேஷன் அட்டைதாரர்களுக்கான கைவிரல் ரேகைப் பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்

maalai-malar_2026-08-26_djl2qd6s_vijay

“அன்பும் மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகட்டும்!” – உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் விஜய் ஓணம் வாழ்த்து!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் ஓணம் நல்வாழ்த்து கேரள மக்களின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் திருநாளை முன்னிட்டுப் பல்வேறு அரசியல் கட்சித்

25kdl2507_2508chn_105_7

வேளாங்கண்ணிக்கு 28-வது ஆண்டாகப் பாதயாத்திரை: புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட அமைச்சர் மரிய வில்சன்!

August 26, 2026

கடலூர்: வேளாங்கண்ணி திருவிழாவும் பாதயாத்திரையும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வரும் ஆகஸ்ட் 29-ஆம்

image-2026-05-9a03504cef34fd9ce0dfa482a9177be9-1200x675

தமிழ்நாட்டில் மேலும் 2 புதிய விமான நிலையங்கள்: த.வெ.க. அரசின் தொலைநோக்குத் திட்டங்கள்!

August 26, 2026

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதோடு, ஓசூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையங்களை

1200-675-19042348-thumbnail-16x9-che3

மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம்: தமிழகத்தில் விரிவுபடுத்தப்படும் ‘வெற்றி பயணம்’ திட்டம் – முழு விவரம்!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் புதிய அறிவிப்பு தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றி

images - 2026-08-26T103751.144

தமிழகத்தில் காணாமல் போன மலைகள்: சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களுடன் அமைச்சர் பிரபு பகீர் தகவல்!

August 26, 2026

சென்னை: தமிழகச் சட்டப்பேரவையில் கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் பிரபு, தமிழகத்தில் வெட்டி எடுக்கப்பட்டு