செங்கோட்டை கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது உமர் தான் – டிஎன்ஏ சோதனை

டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதிலை கைது செய்தபோது, அவர்கள் மிகப் பெரிய தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. காஷ்மீர், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் இருந்து, 2900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் டாக்டர் ஆதில் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முஸாம்மில் அகமதை, உத்தர பிரதேசத்தின் ஷஹரன்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மேலும், இரு டாக்டர்களுடன் தொடர்பில் இருந்த லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீதும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூவரும், ஹரியானாவின் அல் பலாஹ் மருத்துவ பல்கலையில் பணியாற்றியவர்கள் என தெரிந்தது.

இதே பல்கலையைச் சேர்ந்த நான்காவது டாக்டர் உமருக்கும் இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து, அவரை போலீசார் தேடி வந்த நிலையில், டில்லியில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று அவர் வெடிக்க வைத்தார்.

இதில், 13 பேர் உயிரிழந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பயங்கரவாத தாக்குதல் தான் என்பதை மத்திய அரசு உறுதி செய்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 கார் மற்றும் அதனை ஓட்டி சென்று தாக்குதல் நடத்தியது ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் உமர் என்று சந்தேகிக்கப்பட்டது.

அந்த கார் பலருக்கும் கைமாறி இருந்தாலும் கடைசியாக உமர் தான் வாங்கி இருந்தான். அவன் இறந்ததால் அதனை உறுதி செய்ய காரில் சிதறி கிடந்த உடல் பாகங்களை சேகரித்து டிஎன்ஏ மாதிரி மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் உமரின் குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த 2 டிஎன்ஏவும் தற்போது ஒத்துப்போய் உள்ளது.

உமரின் டிஎன்ஏ மாதிரி அவரது தாய் மற்றும் சகோதரரின் டிஎன்ஏவுடன் 100 சதவீதம் பொருந்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் டில்லி கார் வெடிப்பை நிகழ்த்தியது உமர் தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும், வெடிப்புக்குப் பிறகு திங்கள்கிழமை இரவு உமரின் தாயார் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டனர்.

former-dmk-minister-sekar-babu-has-darshan-in-the-general-queue-at-tiruvannamalai

திருவண்ணாமலை கோவிலில் ‘விஐபி’ தரிசனம் மறுப்பு: பொது வரிசையில் நின்று சாமி கும்பிட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு!

September 14, 2026

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்குச் சிறப்புத் தரிசனம் (VIP

paddy-lorry-stock-2026-09-13-22-56-11

தமிழகத்தில் முதற்கட்டமாக 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு: 42,000 டன் நெல் கொள்முதல்!

September 14, 2026

சென்னை: நடப்பு 2026-2027-ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவத்தில் (KMS), விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வதற்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்

1774703-thirumavalavan-1

“ஆ. ராசாவின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது; திமுக அரசியல் மாண்பைக் கடைப்பிடிக்கவில்லை!” – விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

September 14, 2026

சிவகாசி: திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய கருத்துகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக விடுதலைச்

dailythanthi_2026-09-14_ddqq5hw3_police33

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை: கார்களில் பொருத்தப்பட்டிருந்த கட்சிக் கொடிகள் அகற்றம்!

September 14, 2026

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்

40

தேசிய அளவில் மு.க. ஸ்டாலின் தலைமையில் 3-வது அணி? – தேசிய அரசியலில் பரபரப்பு!

September 14, 2026

சென்னை: நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுடன் முரண்பாட்டில்

da91b71b3f023fdab7c8f6e3264e44e6

“தவறு செய்தது தவெகவினராக இருந்தாலும் அதிரடி நடவடிக்கை!” – அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை

September 14, 2026

திண்டுக்கல்: சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்த காரணத்திற்காகத் தவெகவினர் பலர்

1200-675-27624842-thumbnail-16x9-sdew

மயிலாடுதுறை வந்தடைந்தது காவிரி நீர்: மலர் தூவியும் நெல்மணிகளுடனும் விவசாயிகள் வரவேற்பு!

September 14, 2026

மயிலாடுதுறை: மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் விஜய்யால் திறந்துவிடப்பட்ட காவிரி நீர், கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையை வந்தடைந்ததையடுத்து விவசாயிகள்

dt-next_import_h-upload_2024_04_15_816286-setc

தொடர் விடுமுறை நிறைவு: சென்னை திரும்புவோருக்காக 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

September 14, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகப் போக்குவரத்துத்துறை விரிவான

ஆ

முதலமைச்சர் விஜய்யின் பேச்சைக் கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: ஆ. ராசா, மா. சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு!

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் சட்டப்பேரவைப் பேச்சைக் கண்டித்து, சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக எம்.பி. ஆ. ராசா, முன்னாள்

Durai-Vaiko

“கொளத்தூரில் திமுக தலைவருக்கு மக்கள் பிச்சை போடவில்லையே!” – பண்ணையார் அரசியல் குறித்து திமுகவைச் சாடிய துரை வைகோ

September 14, 2026

திருச்சி: தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் திமுக போட்ட ‘பிச்சை’ என விமர்சித்தவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ள மதிமுக எம்.பி.

C_1_1_CH0820_102349139

வாரம் 5 நாட்கள் வேலை: கோரிக்கை நிறைவேறாவிட்டால் அக். 6 முதல் வங்கி ஊழியர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தம்!

September 14, 2026

தஞ்சாவூர்: வாரம் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், செப்டம்பர் 28 முதல் 3 நாள்கள்

omni-buses-strike

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க செப். 16 வரை சிறப்புத் தணிக்கை: போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

September 14, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 16-ஆம்