வடக்கில் போதைப்பொருள் வியாபார பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார், தமிழ் அரசியல்வாதிகள் இணைவு – அமைச்சர் சந்திரசேகர்

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தமிழ் மக்களுக்கு கார்த்திகை மாதம் என்பது முக்கியமான மாதம். இந்த மாதம் மாவீரர்களை நினைவு கூரும் மாதமாகும். அதுமட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை நினைவு கூரும் மாதம். இந்த மாதத்தில் இருந்துகொண்டு நாங்கள் திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. அதாவது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்து இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று, தமிழ் மக்களுக்கு எதனையாவது செய்ய வேண்டும் என போராடிய மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் ஆசைகள் மற்றும் அபிலாசைகள் என்ன என்பதனை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அங்குள்ள மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும். இந்த வாழ்க்கையை ஏற்படுத்துவதற்காக அவர்கள் போராடியிருந்தால் இன்று அந்த இளைஞர்களின் கனவினை நனவாக்கும் செயற்பாடுகளை எந்தவொரு தமிழ் கட்சியாவது எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாவது அன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் செய்த அர்ப்பணிப்பு தியாகங்களை செய்கின்றார்களா? என்பது கேள்விக்குரிய விடயம் .

அதுமாத்திரமன்றி வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் மக்கள் தொகை குறைந்துகொண்டு வருகின்றது. வறுமை கூடிய மாகாணமாக வடக்கு மற்றும் கிழக்கு காணப்படுகிறது. இன்று தேசிய உற்பத்திக்கு குறைந்த பங்களிப்பு செய்கின்ற மாகாணங்களாகவும் உள்ளன. இதன்மூலம் இந்த மாகாணங்களுக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகள் தொடர்பில் இந்த மாகாணங்களை கண்டுகொள்ளவில்லை. உரிய தீர்வுகளையும் வழங்கவில்லை. அதன் விளைவாகவே வடக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டில் 8இலட்சத்து 30ஆயிரம் மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால்தற்போது 6 இலட்சத்து 10 ஆயிரம் மக்களே வாழ்கின்றனர். அப்போது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த மாவட்டம் இப்போது 6 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாவட்டமாக இருக்கின்றது. வருகின்ற வருடங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் குறையுமா என்றும் தெரியாது. இதனால் எமது அரசியல் இருப்பும் கேள்விக்குரியதாகியுள்ளது. எம்.பிக்களை தெரிவு செய்வதற்கான மக்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமைக்கான காரணத்தை கண்டறிந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் வேகமாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதனால் தமிழ் மக்களின் குடிப்பரம்பல் மேலும் குறைவடைகின்றது. கல்வியில் முன்னேறியிருந்த சமூகம் இப்போது கடந்த வருடங்களாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அதில் முன்னேற்றம் காண்பதற்கான நம்பிக்கை உருவாகியுள்ளது. இது எங்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையாகவே இருக்கின்றது.

போதைப்பொருள் மாபியாக்கள் வடக்கை ஆளுகின்றனர். அது வடக்கை அச்சப்படுத்துகின்றது. இதில் இருந்து வடக்கை மீட்க வேண்டும். கடந்த காலங்களில் சஜித் அணியினரை சார்ந்தவர்கள் 78ஆம் ஆண்டில் இருந்து அவ்வாறான நாசகர வேலை மாபியாக்களை உருவாக்கியுள்ளனர் என்றார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

கடந்த 7 மாதங்களாக கல்வியில் வடக்கு முன்னேற்றம் காண்பதாக கூறியுள்ளீர்கள் எதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு கூறுகின்றீர்கள் ?. அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமே போதைப் பொருளுக்கு பிரதான காரணம். இதனால் எப்போது இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றப் போகின்றீர்கள் எனக்கேள்விகளை எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிள்ளைகளை கல்வி கற்பதற்காக கொழும்புக்கு அனுப்பும் நிலைமை காணப்பட்டது. அத்துடன் போதைப் பொருள் அச்சுறுத்தல் காரணமாக அதிகளவான பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. யதார்த்தமே இது. யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

இதேவேளை போதைப் பொருள் பிரச்சினைக்கு பின்னால் இராணுவம் மற்றும் பொலிஸ் இருப்பதாக கூறினீர்கள். அதில் உண்மை இருக்கின்றது. இராணுவமும் பொலிஸும் வேறு அல்ல. இது மாபியாக்களுடன் இணைந்துள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் பிணைந்துள்ளனர். அந்த அரசியல்வாதிகள் அண்மையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்றார்.

இவ்வேளையில் மீண்டும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போதைப் பொருளுடன் இராணுவம் பொலிஸ் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் ஏற்றுக்கொண்டுள்ளமையை நான் வரவேற்கின்றேன். இதற்கு முன்னரான அரசாங்கங்கள் இதனை கூறியதில்லை. நீங்கள் இராணுவத்தை பொறுப்புக்கூற வைக்காமல் இந்த மாபியாக்களை இல்லாமல் செய்யப் போவதில்லை. வடக்கில் இரண்டு பிரஜைகளுக்கு ஒரு இராணுவ சிப்பாய் இருக்கும் நிலைமையே இருக்கின்றது என்றார்.

இதேவேளை தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர் இந்த விடயத்தில் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதோ, பொலிஸார் மீதோ பழிகூற முடியாது. ஒரு சிலரின் செயற்பாடுகள் உள்ளன. உங்களுடைய நண்பர்களின் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும் இந்த மாபியாக்களுடன் பின்னால் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்

nug

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு

November 17, 2025

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள

uthaya

அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது – உதய கம்மன்பில

November 17, 2025

திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை