பெருந்தோட்ட மக்களின் சம்பளம்; இதுவரை காலமும் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது – உபாலி பன்னிலகே

பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் இதுவரை காலமும் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது. எவ்வித போராட்டங்களுமில்லாம் பெருந்தோட்ட மக்களுக்குரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை அவர்களின் நாளாந்த சம்பளத்துடன் மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த மக்களின் ஏனைய அடிப்படை பிரச்சினைகள், உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வரவு – செலவுத் திட்டத்தின் பிரதான நோக்கம் என்னவென்பதை எதிர்க்கட்சிகளுக்கு எடுத்துரைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதையிட்டு கவலையடைகிறேன்.

வரவு – செலவு விவாதத்திலும் குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திய குற்றச்சாட்டுக்களை மாத்திரமே எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர்.

அடிமட்ட மக்களின் நலனை கருத்திற் கொண்டு ஜனாதிபதி வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். இவர்களின் ஆட்சிக்காலத்தில் 78 வரவு – செலவுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைந்திருக்கும், நாடும் அபிவிருத்தியடைந்திருக்கும்.

போலியான தற்காலிக நிவாரணமளித்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நிலையான பொருளாதார இலக்கை அடிப்படையாகக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேரண்ட பொருளாதார கொள்கைகளை அடைவதற்காக 6 திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமளிப்பதை காட்டிலும் அவர்களை தொழிற்றுறையில் முன்னேற்றுவதற்கும் உரிய திட்டங்கள் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகை மற்றும் நிவாரணங்களை நியாயமான முறையில் வழங்குவற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் அரசியல் பேசுபொருளாகவே பயன்படுத்தப்பட்டது. எவ்வித போராட்டங்களுமில்லாம் பெருந்தோட்ட மக்களுக்குரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை அவர்களின் நாளாந்த சம்பளத்துடன் மாத்திரம் வரையறுக்க முடியாது. அந்த மக்களின் ஏனைய அடிப்படை பிரச்சினைகள், உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே நாங்கள் எந்த தரப்பினரையும் புறக்கணிக்கவில்லை.

இந்த வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் சிறந்த முறையில் செயற்படுத்தப்படும். அரசமுறை கடன்களை முறையாக செலுத்தும் வகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வோம் என்றார்.

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்

a35

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

July 28, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 28, 2026

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Nali

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

July 28, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப்

Crick

கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

July 28, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது. புதிய

cyb

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

July 28, 2026

துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய

exc

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

July 28, 2026

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப்

kapil-sibal-saurav-das-pti

நீட் போராட்ட மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார் கபில் சிபல்!

July 28, 2026

புதுடெல்லி: தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்திவிட்டு,

MediaFile

எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

July 28, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட