இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி தோற்றது.
பொலொக்னா சார்பாக திஜ்ஸ் டல்லிங்கா, ஜோன் லுகுமி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (10) நடைபெற்ற லேஸியோவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது. இன்டர் சார்பாக லொட்டரோ மார்டினெஸ், அஞ்சே-யோன் பொன்னி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.