2 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட பரந்தன் பொது நோக்கு மண்டபம் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இன்று(30) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், மாவட்ட அரசாங்கதிபர், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, போதைப்பொருளுக்கெதிராக சத்தியப்பிரமாணமும் செய்யப்பட்டது.