முன்னணி நடிகை மீனா இரண்டாம் திருமணம்?

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகத் திகழும் 49 வயது மீனாவின் வாழ்க்கையைச் சுற்றி மீண்டும் ஒரு பரபரப்பான வதந்தி பரவுகிறது.

ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, மீனா 45 வயது அமைச்சர் ஒருவரின் மகனைத் திருமணம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அமைச்சர் மகன் தனது முன்னாள் மனைவியை விவாகரத்து செய்தவர் எனவும், அவருக்கு 15 வயது மகள் ஒருவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வதந்திகளுக்கு மத்தியில், மீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் ஊடக கவனத்தின் மையமாக மாறியுள்ளது. 2009ஆம் ஆண்டு வணிகர் வித்யாசாகரைத் திருமணம் செய்த மீனா, 2022இல் அவரது திடீர் மரணத்தால் பெரும் துயரத்தை அனுபவித்தார்.

அவரது மகள் நைனிகா (13 வயது) மீதான அன்பும் கவனமும் மட்டுமே தனது வாழ்க்கையின் மையமாக இருப்பதாக மீனா அறிவித்திருந்தார். இரண்டாம் திருமணம் குறித்து எந்த யோசனையும் இல்லை என அவர் தெளிவாகக் கூறியிருந்தாலும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் இத்தகைய வதந்திகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றன.

அக்கட தேச ஊடகங்களின் அறிக்கைகளின்படி, இந்த 45 வயது ஆண் தனது முந்தைய திருமணத்தை முடிவுக்கு கொண்டுவந்து, தற்போது மீனாவுடன் உறவு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு 15 வயது பருவ வயது மகள் இருப்பதாகவும், இந்தத் திருமணம் இரு குடும்பங்களின் ஒப்புதலுடன் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீனாவின் 13 வயது மகள் நைனிகா இந்த விஷயத்தில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதாகவும் வதந்திகள் சொல்கின்றன. இருப்பினும், இந்தத் தகவல்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ உறுதிமொழியும் இல்லை, மேலும் மீனாவின் அலுவலகத்திலிருந்து இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை.

கணவர் வித்யாசாகரின் மறைவுக்குப் பின், மீனா பலமுறை ஊடகங்களிடம் பேசியபோது, “என் குடும்பம் இன்னும் துயரத்தில் உள்ளது. இரண்டாம் திருமணம் எனது திட்டங்களில் இல்லை. நைனிகாவுடன் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறேன்” என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த வதந்தி உண்மையா என்பதை உறுதிப்படுத்த, மீனாவின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காகவும், அக்கட தேச ஊடகங்களின் மேலும் விவரங்களுக்காகவும் காத்திருக்க வேண்டியிருக்கும்.

p_Anu

சட்டவாட்சி பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளதா?

November 18, 2025

தம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை என்று மார்பு தட்டிய தேசிய மக்கள் சத்தியினர்,ச ட்டவாட்சியை விட்டுச் சறுக்கி விழுந்து, பௌத்த

kath

மனநல நோயாளியின் கத்தி குத்தில்: 7 பேர் படுகாயம்

November 18, 2025

கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மனநல

Judment

கொடிகாமம் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்; விசாரணைகளுக்கு உத்தரவு

November 18, 2025

யாழ்ப்பாணம் – கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும்

ko

மண்சரிவு அபாயம்

November 18, 2025

பெரகல-வெல்லவாய சாலையில் ஹல்துமுல்லவில் உள்ள கொஸ்லந்த கல்வெட்டுக்கு மேலே உள்ள மலையின் ஒரு பகுதி நேற்று திங்கட்கிழமை (17) காலை

ma

சிறைச்சாலையில் குழப்பங்கள் வெடிக்குமென சபையில் எச்சரிக்கை?

November 18, 2025

அதிகபடியான நெரிசலால் மெகசின் சிறைச்சாலை “வெடிக்கத் தயாராக” இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நீதி மற்றும்

ba

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

November 18, 2025

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட 50 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி காணியை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகக் கூறப்படும்

aru

சுமந்திரன் சீற்றம்; அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும்

November 18, 2025

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக்

pu)Nama

புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் – நாமல்

November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை