இந்தியாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தெற்காசியாவின் வேகமான தடகள வீராங்கனையாக மகுடம் சூடிய சஃபியா யாமிக்கை வரவேற்கும் நிகழ்வு கண்டியின் கட்டுகெல்லேயில் நடைபெற்றது.
தனது சொந்த ஊரான கண்டியின் கட்டுகெல்லேக்கு சஃபியாவை வரவேற்பதற்காக பிரதேசவாசிகளால் எளிமையான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இந்த நிகழ்வில் கண்டி நகராட்சி ஆணையர் இந்திகா குமாரி அபேசிங்க மற்றும் பலர் கலந்து கொண்டதுடன் இதன்போது சஃபியா தனது தங்கப் பதக்கங்களை தனது தந்தை ஜே.எம். யாமிக், தாய் மற்றும் பயிற்சியாளருக்கு அணிவித்துள்ளார்.