தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையேயான புதிய கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதன் மூலம் இந்தியா-இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
மும்பையில் 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சர்பானந்த சோனோவால் இடையேயான சந்திப்பின் போது இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த விடயம் தொடர்பில் இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழங்கல் அமைச்சு எக்ஸ் தளத்தில்,
“2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ஸ்ரீ சர்பானந்த சோனோவால் மற்றும் இலங்கை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் த அநுர கருணாதிலக்க இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தியா-இலங்கை படகு சேவை மூலம் கடல்சார் இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது, பிராந்திய ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துதல் மற்றும் மக்களிடையேயான இணைப்பை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இந்த கலற்துரையடலில் கவனம் செலுத்தப்பட்டன”
மும்பையில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்திலேயே இந்த கலந்துரையாடல் நடைபெற்றன. 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்திம் 27 ஆம் திகதி ஆரம்பித்து 31 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.