பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கடத்தும் ஒரு வலையமைப்பை கொழும்பு குற்றப்பிரிவு அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வலையமைப்பு, இந்தியாவில் இருந்து கடல் வழியாக கேரள கஞ்சாவை நாட்டிற்கு கொண்டு வரும் குழுவுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் சக்திவாய்ந்த குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் உட்பட சுமார் 100 பேர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி குழுவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் சகோதரர்களில் மூத்தவரான ஆனந்தன், இந்தக் குழுவின் மூளையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இஷாரா உட்பட மூன்று பேரை ஆனந்தன் படகு மூலம் இந்தியாவிற்கு கடத்தியதாக தெரியவந்துள்ளது.
இஷாரா அரியாலையில் இருந்து படகு மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அந்த பணத்தை ஜே.கே. பாய் என்ற நபர் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
அது மாத்திரமன்றி இஷாரா செவ்வந்தி படகில் இந்தியா செல்வதற்கு முன்பு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஆனந்தன் என்ற கடத்தல்காரருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இஷாரா செவ்வந்தி பிடிபட்டபோது சிலோன் பாய் நேபாளத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. ஜே.கே. பாயைப் போலவே, சிலோன் பாய் டுபாயிலிருந்தும் மனித கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவுகளில் உள்ள மனித கடத்தல்காரர்களுடன் அவர்களுக்கு மிக நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவின் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் உள்ள ஜே.கே. பாய், இது தொடர்பாக பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.