ரணிலுடன் பணியாற்றுவது இலகுவாக இருந்தது – முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி!

இலங்கையில் இருந்த ஜனாதிபதிகளில் எவருடனும் தனக்கு எந்த பிரச்சினைகளும் இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரம் பற்றி அறிந்தவர் என்பதால் அவருடன் பணியாற்றுவது இலகுவாக இருந்தது என்று தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நாட்டின் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்க்காணலில் இதுபற்று மேலும் கூறியிருந்த அவர், “இதன் போது தனது திருமண அனுபவம் பற்றி அவர் சுவாரஸ்யமாக கருத்து பகிர்ந்து கொண்ட போது , மூன்று வருட காலத்தில் தனது காதலியை பல்கலைக்கழகத்தில் அவர் கவனமாக பார்த்து கொண்டதாகவும், அதன் பலனாக 55 வருடங்களாக அவரது மனைவி அவரை பார்த்துக்கொள்கிறார் என்று கனிவாக பேசினார். இதனை பொருளாதார வார்த்தைகளில் கூறுவதாயின் மூன்று வருட முதலீடு ஐம்பத்ததைவருடங்களாக எனக்கு பயனளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இருவரும் ஆங்கில மொழிப் பேசிக் கொண்டதால் மொழிப் பிரச்சினை ஒன்று வரவில்லை என்றும். தனது குடும்பத்தில் அனைவரும் பொதுச் சேவையில் ஈடுபட்டவர் என்று கூறினார். சிறு வயதிலிருந்து மத்திய வங்கியிலிருந்து தனக்கு ஆர்வம் இருந்தது என்றும் கூறினார்.

அதேபோல் இலங்கையில் முதல் நிதி அமைச்சரான ரொனி டி மெல் அவர்களோடு பழகிய காலம் வாழ்வில் நல்ல அனுபவங்களை தந்தது என்றும் அதற்காக அவருக்கு தான் நன்றி கூறுவதாகவும் இதன் போது கூறினார்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் போது இலங்கை முந்திய நாடாக ஜப்பான் மட்டுமே இருந்தது. ஆசியாவில் இல ங்கை இடம் இரண்டாவதாகவும் வலுவாகவும் இருந்தது. 1966களில் சிங்கப்பூரை விடவும் இலங் கையின் மொத்த தேசிய உற்பத்தி அதிகமாக இருந்தது. இன்றைய பின்னடைவுக்கு இலங்கையில் சற்று விலை அதிகரித்தாலும் மக்களின் சடுதியான எதிர்ப்பு கிளம்வுதே காரணமாகும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல் தன்னிடம் இருக்கின்ற பணத்திற்கு உட்பட்டதாகவே தனது செலவுகள் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

1980 களிலிருந்து பொருளியல் ஆலோசகராக பணியாற்றிய அனுபவத்தில் எந்த ஜனாதிபதியுடனும் தனக்கு முரண்பாடுகள் இருக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனேயே நேரடியாக பணியாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருந்தது என்றும் அவர் பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர். அவருடன் பணியாற்றுவது மிக இலகுவானது.

மறுமுனையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்க குமாரதுங்கவின் அரசியல் நிலைப்பாடுகள் தனது அரசியல் நிலைப்பாடுகளுடன் சற்று ஒத்துப்போவதாக அமைந்தது என்றும், அவர்களுக்கும் நல்ல இடம் கிடைத்திருக்க வேண்டும் என்றும் இலங்கையில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவர்களால் ஆட்சியை கொண்டு நடத்துவது சற்று சிரமமானதாக அமைந்திருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்,இலங்கையில் காணப்பட்ட முரண்பாட்டு நிலைமைகள் காரணமாக 1983 களில் இலங்கைக்கு வரவிருந்த பல பில்லியன் முதலீடுகள் இழக்கப்பட்டது” என்றும் தெரிவித்தார்.

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்