இலங்கை மற்றும் நேபாள பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷார செவ்வந்தி உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களின் புகைப்படங்களை நேபாள ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
இஷாரா செவ்வந்தி வீரசிங்க, ஜீவதாசன் கனகராசா, தக்ஷி நந்தகுமார், தினேஷ் ஷ்யாமந்த டி சில்வா, கென்னடி பஸ்தியாம்பிள்ளை மற்றும் தினேஷ் நிசாந்த குமார ஆகியோர் கைது செய்யப்பட்டதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் நடந்த கணேமுல்ல சஞ்சீவ கொலையில் இஷார செவ்வந்தி முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேபாள பொலிஸார் மற்றும் இன்டர்போல் அதிகாரிகளுடன் சென்ற இலங்கை அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் இரவு இந்த சந்தேகநபர்களை கைது செய்திருந்தனர்.
அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மேவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இஷார செவ்வந்தியின் இருப்பிடத்தை பொலிஸார் கண்டுப்பிடித்தனர்.
இதனையடுத்தே இஷார செவ்வந்தியை கைது செய்யும் திட்டங்கள் ரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.