ஒரு வருடத்தில் நாட்டின் கடனை செலுத்த என்ன கேள்வி!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகிவிட்டன. கடனைச் செலுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை? புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் எடுத்த புதிய கடன்கள் யாவை? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அதன்படி, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (07) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதான கீழ்வரும் கேள்விகளையும் அரசாங்கத்திடம் தொடுத்திருந்ததார்.

கேள்விகள்-

இலங்கையர்களாகிய நாம் வங்குரோத்தான நாட்டை அனுபவிக்க வழிவகுத்த விசேட காரணிகளில் ஒன்று தான் மோசமான கடன் முகாமைத்துவமாகும். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு கண்டிருந்த சமயம் நாட்டைப் பொறுப்பேற்ற தற்போதைய அரசாங்கம், நாட்டை அபிவிருத்திப் பாதையை நோக்கி வழிநடத்தும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். இதன்பிரகாரம், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட இச்சந்தர்ப்பத்தில், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் மற்றும் அதற்கான பொருளாதார தயார்நிலையையும் தெரிந்து கொள்ள பின்வரும் கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

1. தற்போது இலங்கையின் ஒட்டு மொத்த கையிருப்புத் தொகை எவ்வளவு? (பரிமாற்றத் தொகையை [SWAP] தனியாகக் குறிப்பிடவும்) கடந்த ஆண்டில் கையிருப்பில் காணப்பட்ட மாதாந்த மாற்றங்கள் யாவை?

2. தற்போது நாட்டின் மொத்த கடன் தொகை எவ்வளவு? அந்தக் கடனில் உள்நாட்டுக் கடன் எவ்வளவு, வெளிநாட்டுக் கடன் எவ்வளவு என்பதைத் தனித்தனியாகக் கூற முடியுமா? இதில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெற்றுள்ள (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) கடன் தொகைகள் யாவை? வெளிநாட்டுக் கடனைப் பொறுத்தவரை, இருதரப்பு, பலதரப்பு மற்றும் பிணைமுறி பத்திரதாரர்கள் என தனித்தனியாகத் தகவல்களை வழங்க முடியுமா?

3. இந்த ஆண்டில் கடன் தவணைகள் மற்றும் வட்டியாக செலுத்தப்படும் முழுத் தொகை எவ்வளவு? அடுத்த 5 ஆண்டுகளுக்கு இது எவ்வாறு மாறுகிறது என்ற முறையை வருடாந்தம் தனித்தனியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா?

4. அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடனைச் திருப்பிச் செலுத்தும் செயல்முறையை தொடர்ந்தும் நிலைபேறானதாக பேணிச் செல்ல அரசாங்கத்தினால் மதிப்பிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி விகிதம் யாது? இந்த இலக்குகளில் எத்தனை விகிதம் இந்த ஆண்டு அடையப்பட்டுள்ளன? அடுத்த 5 ஆண்டுகளில் இது எவ்வாறு செயல்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது?

5. கடனைத் திறம்பட செலுத்த ஆண்டுதோறும் பேணிச் செல்ல வேண்டிய மதிப்பிடப்பட்ட அல்லது எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச ஏற்றுமதி வருவாய் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதல் எவ்வளவானதாக அமைந்து காணப்பட வேண்டும்? இதற்காக கடந்த ஆண்டில் அரசாங்கம் வகுத்துள்ள திட்டம் யாவை? இந்தத் வேலைத்திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தால் வெற்றிகரமாக அடைந்து கொள்ளப்பட்ட இலக்குகள் யாவை?

6. கடந்த ஆண்டு அந்நிய நேரடி முதலீடாக இவ்வளவு தொகையை இலங்கை பெற்றது? அடுத்த 5 ஆண்டுகளில் அரசாங்கம் எதிர்பார்க்கும் அந்நிய நேரடி முதலீடுகளின் (FDI) அளவு யாவை ? எந்தெந்த துறைகளில், எந்த தொகைகளில் இந்த முதலீடுகளை ஈர்த்துக் கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றன?

7. SVAT-ஐ இரத்துச் செய்வதாலோ அல்லது தொடர்வதாலோ பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் கணிப்பீடொன்றை (Impact Assessment) அரசாங்கம் முன்னெடுத்துள்ளதா ? ஆமெனில், அது தொடர்பான புள்ளிவிவர தரவு அறிக்கைகள் யாவை ? அவற்றை சபையில் சமர்ப்பிக்க முடியுமா?

tab

மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

November 18, 2025

சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார் 350

wea

தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது…

November 18, 2025

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து

senthoora

புத்தர் சிலை விவகாரம்; திருகோணமலையில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் திட்டமிட்டவை – இராவண சேனா தலைவர்

November 18, 2025

திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெரிவித்தார். திருகோணமலை

boa

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவு

November 18, 2025

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை

mav

கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

November 18, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப்

Death-2

துப்பாக்கிச் சூட்டில்; படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

November 18, 2025

மீட்டியாகொடவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை

v

வனவளத் திணைக்களம் பயிர் நிலங்களை சேதப்படுத்துகின்றது!

November 18, 2025

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு

ar

புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி வந்த லொறி தடம்புரண்டு விபத்து

November 18, 2025

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில்

cha

பொதுநலவாய சதுரங்கப் போட்டி; இலங்கைக்கு 09 பதக்கங்கள்

November 18, 2025

மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 09 பதக்கங்களை வென்றுள்ளது. அதற்கமைய, 03 தங்கப்

ey

இலங்கையில் பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்

November 18, 2025

உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி

aa

ஏஎவ்சி ஆசிய கிண்ண 2ஆம் கட்ட கால்பந்தாட்டப் போட்டி

November 18, 2025

தாய்லாந்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆம் சுற்று தகுதிகாண் 2ஆம் கட்ட (2nd

tam

நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியை சந்திக்கிறது!

November 18, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான