6.5 மில்லியன் செலவு செய்த இஷாரா செவ்வந்தி – நேபாளத்தில் எதிர்பார்த்த பாதுகாப்பு கிடைக்கவில்லை

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களின் கைது குறித்து நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேகநபர்களின் நடமாட்டம் மற்றும் அவர்கள் பிடிபடுவதற்கு வழிவகுத்த ரகசிய நடவடிக்கை பற்றிய புதிய விவரங்களை காத்மாண்டு போஸ்ட் வெளியிட்டுள்ளது.

அறிக்கையின்படி, பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட சந்தேக நபர்கள் காத்மாண்டு மற்றும் பக்தபூர் பகுதிகளில் மிகவும் இரகசியமாக வசித்து வந்தனர்.

அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகளை தவிர்க்க நேபாளத்தின் இந்தியாவுடனான திறந்த எல்லையைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸார் சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

குற்றங்களுக்காகத் தேடப்படும் நபர்களைக் கண்காணிக்க உறுப்பு நாடுகளையும் எச்சரித்திருந்தனர்.

சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு கொழும்பு நீதிமன்ற அறைக்குள் துப்பாக்கியைக் கொண்டுச் சென்றதாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி, இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் என கூறி, போலி அடையாளத்தின் கீழ் பக்தபூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், இஷாரா செவ்வந்தி தனது அறையை விட்டு வெளியேறுவது அரிதாகவே இருந்தது என விசாரணையாளர்கள் காத்மாண்டு போஸ்டிடம் தெரிவித்துள்ளனர்.

காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது நேபாள காவல்துறையின் இன்டர்போல் தேசிய மத்திய பணியகத்தால் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கண்காணிப்கு மற்றும் கைது வடிக்கையை நேபாள காவல்துறை தலைமையகத்தில் உள்ள இன்டர்போல் தேசிய மத்திய பணியகத்தின் குழு மேற்கொண்டது” என்று நேபாள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிக்க 6.5 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முதலில் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்று, இரண்டு வாரங்கள் அங்கேயே தங்கி, பின்னர் தரை வழியாக நேபாளத்திற்குள் நுழைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“நேபாள காவல்துறை தன்னைக் கைது செய்யாது என்று நம்பியதால், அவள் அங்கேயே பாதுகாப்பாக தங்கியருந்தார்.

கெனடி பாஸ்டியாம்பிள்ளை (ஜே.கே. பாய் என அழைக்கப்படுபவர்) உட்பட மற்ற சந்தேக நபர்கள் தாமெலில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கண்காணிக்கப்பட்டனர், அதே நேரத்தில் மித்ராபார்க், நியூ பஸ் பார்க் அருகே இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு சந்தேக நபர்கள் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி விமானம் மூலம் நேபாளத்திற்குள் நுழைந்ததாகவும், மீதமுள்ள நான்கு பேர் ஆவணங்கள் இல்லாமல் எல்லையைக் கடந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

மலேசியா மற்றும் துபாய் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய கெஹல்பத்தர பத்மே தலைமையிலான கும்பலைச் சேர்ந்த ஆறு சந்தேக நபர்களும் இருப்பதாக காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

சஞ்சீவவின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் பத்மே கடந்த ஓகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்கள் நேபாளத்தில் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதால், நேபாள சட்டத்தின் கீழ் அபராதம் செலுத்திய பின்னர் அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக நேபாள காவல்துறை அதிகாரிகள் காத்மாண்டு போஸ்டிடம் தெரிவித்தனர்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்