35 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது – தீர்வு காண விஜய் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படை 35 தமிழக மீனவர்களை கைது செய்து, படகுகளைப் பறிமுதல் செய்தது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரின் தொடர்ச்சியான அத்துமீறல் நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்று (நவம்பர் 3) இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 35 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதுடன், அவர்களின் நான்கு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்திலும் மீனவர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்களைக் கைது செய்வதற்கு முந்தைய நாளான நேற்றும் இலங்கை கடற்படையினரின் அராஜகம் அரங்கேறியுள்ளது. அன்றைய தினம், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் அதிகமான இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளனர்.

மீன்பிடிக்க முடியாமல் கரைக்குத் திரும்பிய மீனவர்கள், இந்தப் பிரச்சினை காரணமாக ஒவ்வொரு படகுக்கும் ரூ. 10,000 முதல் ரூ. 50,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கவலையுடன் தெரிவித்தனர். மேலும், இலங்கை கடற்படையினர் மீனவர்களைத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி, அவர்களின் அத்துமீறல் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் காட்டுவதாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும், அவர்களின் படகுகள் சேதப்படுத்தப்பட்டுப் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகி வரும் நிலையில், இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு அவசியம் என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து அழுத்தமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அதே அக்கறையோடு எங்கள் மீனவர்கள் மீதும் கவனம் செலுத்தி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி

55

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

November 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17)

2

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

November 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17)

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்