பருத்தித்துறையில் 28 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸார் மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (14.01.2026) பிற்பகல் இன்பருட்டி கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கைப்பற்றப்பட்ட 28 கிலோ கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேக நபரும் பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பு அதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.