22,522 குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில்

நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு பூராகவும் அமைந்துள்ள 762 இடைத்தங்கல் முகாம்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 நபர்கள் இதுவரை தங்கியுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான இடைத்தங்கல் முகாம்கள் அமைந்துள்ளன. அங்குள்ள 222 இடைத்தங்கல் முகாம்களில் 5,427 குடும்பங்களைச் சேர்ந்த 17,437 பேர் தங்கியுள்ளனர்.

அதற்கடுத்ததாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் அதிக இடைத்தங்கல் முகாம்கள் அமைந்துள்ளன. நுவரெலியாவில் 206 முகாம்களில் 6,487 குடும்பங்களைச் சேர்ந்த 19,750 பேரும், பதுளை மாவட்டத்தில் 155 முகாம்களில் 6,026 குடும்பங்களைச் சேர்ந்த 19,409 பேரும் தற்போது தங்கியுள்ளனர்.

இதேவேளை, இந்த இடைத்தங்கல் முகாம்களில் உள்ள குடும்பங்களை விரைவாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

2-3 மாதங்களுக்குள் அக்குடும்பங்களை மீள்குடியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இந்த முகாம்களில் தங்கியுள்ள சிலரின் வீடுகள் முழுமையாகவும், மேலும் சிலரின் வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், தாம் வசித்த இடங்களில் நிலவும் ஆபத்து நிலைமை காரணமாக மீண்டும் அவ்விடங்களில் குடியேற மற்றுமொரு தரப்பினர் விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அதற்கமைய, அத்தரப்பினருக்கு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 மாத வீட்டு வாடகை கொடுப்பனவை வழங்கும் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு வீடுகளை வழங்குவதே தற்போது சவாலாக மாறியுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 50 இலட்சம் ரூபா பணத்தை வழங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து காணிகளை வழங்குவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அதற்காக அரச காணிகள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.

arrest

இலஞ்சம் பெற்ற போக்குவரத்துப் பொலிஸ் சார்ஜன்ட் கைது

December 18, 2025

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப்

g

இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு தடுப்பூசி காரணமா?

December 18, 2025

சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் விளக்கம் கொழும்பு IDH வைத்தியசாலையில் இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு ‘ஒண்டான்செட்ரான்’ (Ondansetron) தடுப்பூசிதான் காரணமா என்பது

kan

கணேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேகநபருக்கு பிணை

December 18, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் அஸங்க எஸ்.

mu

இந்தியா தென்னாப்பிரிக்க 4-வது டி-20 போட்டி இரத்து

December 18, 2025

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில்

ind

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திரா ரேடேர்ஸ் நன்கொடை

December 18, 2025

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அரசாங்கத்தின் “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு Indra Traders (Pvt) Ltd

Ela

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவு

December 18, 2025

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று (17) உத்தரவு விடுத்துள்ளது.

ra

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

December 18, 2025

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை

p

அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம் புறப்பட்டது

December 18, 2025

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்ட TK733 எனும் துருக்கி விமானம், நேற்று மாலை மீண்டும் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்டுச்

j

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் ஜீவன் சந்திப்பு

December 18, 2025

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது,

nayar

நாயாறு பாலம் இலங்கை இராணுவ பொறியியலாளர்களால் புனரமைப்பு

December 18, 2025

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் முற்றாக உடைந்த முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலத்தை, இலங்கை

nayar

சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயார்!

December 18, 2025

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்மின் (Wang Dongming)

ajith

தரமற்ற மருந்துகள் இறக்குமதி; இந்தியாவுடனான இரகசிய ஒப்பந்தத்தின் விளைவே!

December 18, 2025

இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை வெளிப்படுத்துமாறு நாம் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் கோரியிருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.