2045ம் ஆண்டுக்குள் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள் என அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோஸ் கூறியுள்ளார்.
உலகின் 3வது கோடீஸ்வரர், அமேசான் நிறுவனர், பிரபல தொழிலதிபர் என்ற பெருமைக்குரியவர் ஜெப் பெஜோஸ்.
இத்தாலிய தொழில்நுட்ப வார விழாவில் அவர் பேசியதாவது: அடுத்த ஓரிரு தசாப்தங்களில் லட்சக்கணக்கான மக்கள் விண்வெளியில் வசிப்பார்கள். இது வேகமாக நடக்கப்போகிறது. இது தேவை காரணமாக நடக்காது. மக்களாகவே விரும்பி விண்வெளியில் வசிப்பார்கள்.
நிலவின் தரைபரப்பு அல்லது வேறு எங்கும் பணியாற்றுவதற்கு ரோபோக்களை அனுப்பி வைக்க முடியும். அது மனிதர்களை அனுப்புவதைக் காட்டிலும் செலவு குறைந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.