2030 இல் 2.5 பில்லியன் டொலர் வரை தேயிலை ஏற்றுமதி வருமானம்?

அரசாங்கத்தால் 2030ஆம் ஆண்டு தேயிலை உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் கிலோ கிராம் இலக்கில் 75 சதவீத பங்களிப்பு சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. அத்தோடு தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2030இல் 2.5 பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பொது முகாமையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (17) ‘6ஆவது ஆசிய தேயிலை கூட்டமைப்பு உச்சி மாநாடு மற்றும் ஆசிய தேயிலை கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றல்’ தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பில் முதன் முறையாக இலங்கை தலைமை வகிக்கும் 6ஆவது ஆசிய தேயிலை கூட்டமைப்பு உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது. 6 நாடுகளைச் சேர்ந்த 25 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். முதன்முறையாக இந்த மாநாட்டுக்கான தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைத்துள்ளமையை வெற்றியாகக் கருதுகின்றோம்.

நாட்டின் தேயிலை உற்பத்தியில் 75 சதவீத பங்களிப்பினை சிறு தேயிலை தோட்டங்களே வழங்குகின்றன. இந்நிலையில் முதன் முறையாக தேயிலை உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2030இல் 400 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 300 மில்லியன் கிலோ கிராம் சிறு தேயிலை தோட்டங்களுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

அந்த இலக்கை அடைவதில் பல சவால்கள் காணப்படுகின்றன. அவ்வாறு எதிர்கொள்ள நேரிடும் சவால்களுக்கான மாற்று தீர்வுகள் குறித்து 3 பிரதான தலைப்புக்களின் கீழ் இந்த மாநாட்டில் முன்மொழிவுகளை முன்வைக்கவுள்ளோம். இறுதியாக 2013இல் அதிகூடிய தேயிலை உற்பத்தியாக 340 மில்லியன் கிலோ கிராமாக பதிவாகியுள்ளது. இது 2024இல் 262 மில்லியன் கிலோ கிராமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டு ஒக்டோபர் வரை 220 மில்லியன் கிலோ கிராம் உற்பத்தி பதிவாகியுள்ளது.

எனவே இதனை 400 மில்லியன் கிலோ கிராம் வரை கொண்டு செல்வது இலகுவான விடயமல்ல. 2024இல் தேயிலை ஏற்றுமதி வருமானம் 1.45 பில்லியன் டொலர்களாகும். 2030இல் இதனை 2.5 பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய இந்த இலக்குகளை வெற்றிகரமாக அடைவதற்கு ஆசிய தேயிலை கூட்டமைப்பு உச்சி மாநாட்டுக்காக கிடைக்கப் பெற்றுள்ள தலைமைத்துவத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்