அமெரிக்காவிற்கு எதிரான எதிர்-வரி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் நீண்டகால வர்த்தகப் போருக்கு கனடா தயார்

அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக கனடாவால் விதிக்கப்பட்ட பழிவாங்கும் வர்த்தக வரிகள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன; இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான எந்த அறிகுறிகளும் தற்போதைக்குத் தெரியவில்லை. இந்த எதிர்-வரிகள் எஃகு (Steel), தளபாடங்கள் முதல் பருத்தி டி-ஷர்ட்டுகள் வரை சுமார் 28 பில்லியன் கனடிய டாலர் ($20 பில்லியன்) மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்குப் பொருந்தும், மேலும் இவை 50% வரை உயர்த்தப்படும். ஆரம்பத்தில் புதிய மீன்கள் மற்றும் நண்டுகள் (Lobster) ஆகியவை […]
1,340 பேரை பலிகொண்ட பேரழிவு: 13 ஆம் நாள் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு!

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கடந்த மாதம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 1,340-க்கும் மேற்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்நாட்டு அரசாங்கம் நேற்று (07) திங்கட்கிழமை தேசிய துக்க தினமாக அறிவித்து அனுஷ்டித்துள்ளது. இமயமலையில் ஏற்பட்ட பனிப் பாறை சரிவைத் தொடர்ந்து பொங்கி வழிந்த போட்டேகோஷி மற்றும் திரிசூலி நதிகளின் வெள்ளப்பெருக்கில் சிக்கி 589 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 5,000 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளனர். […]
மனிதநேய உணர்வை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஒருவரே பண்பாடான மனிதர் – பிரதமர் ஹரிணி

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது ஒரு சிறு பிள்ளை, நிர்க்கதியான ஒருவர் அல்லது பெண் ஒருவரை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் சில கருத்துக்களைப் பார்க்கும்போது, பண்பாடான மனிதனின் தேவையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பண்பாடான மனிதர் என்பவர் புத்தகங்கள் மற்றும் நூல்களிலிருந்து அறிவை மட்டுமே பெற்றவரோ அல்லது மனப்பாடம் செய்தவற்றை முன்வைப்பவரோ அல்ல என்றும், இலக்கியப் படைப்புகளின் ஊடாகத் தனது உள்ளார்ந்த மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, மனிதநேய உணர்வை […]
பலத்த மழைக்கு வாய்ப்பு!

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய […]
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63வது வருடாந்த கூட்டத்தொடர் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று (07) பிற்பகல் ஆரம்பமானது. இந்த அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரையுடன் இந்த அமர்வு ஆரம்பமானது. இதன்போது இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்கும் பணியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மேற்கொள்ளவுள்ளார். இதன்மூலம் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் […]