இலவச விவசாய மின் இணைப்புக்கு ரூ.2,400 கோடி வசூல் செய்தது என்ன ஆனது? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கேள்வி!

மதுரை: விவசாயிகளுக்குத் தட்கல் (Tatkal) முறையில் வழங்கப்படும் இலவச மின்சார இணைப்புக்காக வசூலிக்கப்பட்ட ரூ.2,431 கோடி நிதி எங்குள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கக் கோரித் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. வழக்கின் முக்கிய விவரங்கள்: மனுதாரரின் குற்றச்சாட்டு: மதுரையைச் சேர்ந்த மனகிரி செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தட்கல் திட்டத்தின் கீழ் 89,289 விண்ணப்பங்கள் பெறப்பட்டு மொத்தம் ரூ.2,431.51 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 44,993 பேருக்கு […]

சட்டப்பேரவை வரலாற்றில் புதிய சாதனை: மாற்றுத் தலைவராக அவையை வழிநடத்தி முத்திரை பதித்த பெண் எம்.எல்.ஏ. சத்தியபாமா!

சென்னை: தமிழகச் சட்டப்பேரவையின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பெண் மாற்றுப் பேரவைத் தலைவராக திருப்பூர் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா அவையை வெற்றிகரமாக வழிநடத்திச் சாதனை படைத்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளின் முக்கிய விவரங்கள்: சபாநாயகர் மற்றும் மாற்றுத் தலைவர்கள்: தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்குப் பின்னர் பேரவை சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணைப் பேரவைத் தலைவராக ரவிசங்கரும் பொறுப்பேற்றுள்ளனர். இவர்களைத் தவிர, சபாநாயகர் இல்லாத வேளையில் அவையை வழிநடத்தத் த.வெ.க.வைச் சேர்ந்த விஜய் சரவணன், சத்தியபாமா, […]

முன்னாள் அமைச்சருக்கு 14 ஆண்டுகள் கடூழியச் சிறை

பேரணி ஒன்றில் கலந்துகொண்டவர்களுக்காகச் செலவிடப்பட்ட தொகையைக் குடிவரவு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் ஊடாகச் செலுத்துமாறு அதன் பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமது நிஹால் 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து  அன்று தீர்ப்பளித்துள்ளார். இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக விதிக்கப்பட்ட 14 ஆண்டுகள் தண்டனைக்காலமும், ஏழு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் வகையில் ஒரே நேரத்தில் (ஒன்றன் மீது […]

தர்மபுரம் கிராம மக்களின் குடிநீருக்கு தீர்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த குடிநீர்ப் பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. தர்மபுரம் கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகஇ குறித்த பிரச்சினை அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து மண்முனைப்பற்று பிரதேச சபையின் நிதியூடாக குடிநீர் வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு மக்களின் நீண்டகாலத் தேவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மண்முனைப்பற்று பிரதேச […]

நேபாளத்தில் இதுவரை 12,000 பேர் மீட்பு: 1,000 ஐ கடந்தது உயிரிழப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. நேபாளத்தின் வடக்கே திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனி பாறைகள் சரிந்ததால் கடந்த ஓகஸ்ட் 26 ஆம் திகதி போட்டேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுனாமியைப் போன்று தாக்கிய இந்த ஆற்று வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல்வேறு நீர்மின் […]

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடித்து நொறுக்கப்பட்டது

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் இருந்த நினைவுத் தூபி இனம் தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. போருக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, போர் முடிவடைந்த பின்னர் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு மீளப் புனரமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபி திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மற்றும் அயலவர்கள் […]

பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியலில்…

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு ஐந்து பேரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் செவ்வாய்க்கிழமை (01) காணொளி ஊடாக உத்தரவிட்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டில், கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் […]

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் அவர்கள் கடந்த 11.06.2026 அன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடைபெற்று அவருக்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் கடந்தவாரம் முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கணபதி அறநெறி நூலகத்திற்குப் புத்தகங்கள்

ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நன்னோக்கில், விசேட புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. களுத்துறை மாவட்டம், அகலவத்தை பகுதியில் அமைந்துள்ள ‘டார்டன்பீல்ட் கணபதி அறநெறிப் பாடசாலை’ நூலகத்தை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயலகத்தின் பணிப்பாளர் திருமதி ஆர். எம். தர்ஷனா ரணசிங்க இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்களின் வாசிப்புப் […]

விமானிகளின் இல்லத்தின் பவளவிழா

இலங்கை விமானப்படையின் பெருமைமிக்க விமானப் பாரம்பரியத்தின் இதயத்துடிப்பான, ‘விமானிகளின் இல்லம்’ என்று அழைக்கப்படும் இல. 01 விமானிகளின் பயிற்சிப் பிரிவு, தனது 75ஆவது ஆண்டு விழாவை 2026 செப்டம்பர் 01 அன்று சீனக்குடா விமானப்படை அகடமியில் கொண்டாடியது. ஏழரை தசாப்தங்களுக்கு மேலான நீண்ட வரலாற்றில், இராணுவ விமானப் பயிற்சித் துறையில் சிறப்பாக ஆற்றப்பட்ட இணையற்ற பணி பெருமையுடன் நினைவுகூரப்பட்டது. ராயல் விமானப்படையின் பிளைட் லெப்டினன்ட் நார்மன் லஷ் அவர்களின் தலைமையில், 1951 செப்டம்பர் 01 அன்று கட்டுநாயக்கவில் […]