ஸ்டீபன்வில் அருகே இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: குடியிருப்பாளர்கள் வெளியேற உதவி

தேசிய பாதுகாப்பு நிபுணர்கள் வியாழக்கிழமை வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பு செயிண்ட் ஜார்ஜ் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டு புதன்கிழமை அன்று காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட இராணுவ எறிகணை (military shell) காரணமாக, நியூஃபவுண்ட்லாந்தின் ஸ்டீபன்வில் (Stephenville) பகுதியில் வெளியேற விரும்பும் குடியிருப்பாளர்களுக்கு RCMP காவல்துறை உதவி வருகிறது. “ஒருவேளை இது வெடித்தால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்,” என்று ஸ்டீபன்வில் மேயர் பாப் பைர்ன்ஸ் தெரிவித்தார். இது இரண்டாம் உலகப் போர் காலத்து […]

புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார் என அடையாளம் காட்டிய உறவினர்!

…… கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று முன்னிரவு புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது. அத்துடன் சென்.பற்றிக்ஸ் வீதி குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வேலு உதயகுமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்பதாக கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற குறித்த தொழிலாளி கரைதிரும்பவில்லை என பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடும் […]

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் தேசிய சாதனையாளர் கௌரவிப்பு

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் தேசிய சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது! உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய தேசிய சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் மகிழ்வூட்டும் விளையாட்டுப் போட்டிகளும் அண்மையில் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன. ​இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, கபடிப் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்த கிளி/சிவநகர் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கான மதிப்பளிப்பையும் […]

நாளைஅனுராதபுரத்தில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு எதிராக கண்டன அமைதி பேரணி

நாளை 29/05/2026 தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் செயல்படும் 17மாவட்டங்களான 1)யாழ்ப்பாணம் 2)கிளிநொச்சி 3)முல்லைத்தீவு 4)மன்னார் 5)வவுனியா 6)திருகோணமலை 7)மட்டக்களப்பு 8)அம்பாறை 9)பொலநறுவை 10)மொனராகலை 11)அம்பாந்தோட்டை 12)மாத்தறை 13)காலி 14)களுத்துறை 15)கம்பாஹா(நீர்கொழும்பு) 16)புத்தளம் 17)குருநாகல் ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு எதிராக கண்டன அமைதி பேரணி இடம்பெறவுள்ளது

நயினாதீவு கடலில் படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடலில் படகு கவிழ்ந்து விபத்து. அதில் பயணித்த அதிபர் ஒருவர் இறந்துள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் நடந்துள்ளது நயினாதீவு கடலில் படகு கவிழ்ந்ததில் நயினாதீவு ஸ்ரீ கணேசா அதிபர் மயூரன் நீரில் மூழ்கி இன்று மாலை அகால மரணம் அடைந்துள்ளார். குறித்த அதிபர் புங்குடுதீவில் இருந்து பாடசாலையிலிருந்து அண்மையில் நயினாதீவு மகா வித்தியாலய அதிபராக பொறுப்பேற்றுமை குறிப்பிடத்தக்கது.

திருமதி தேவராசன் பர்வதம் (பவானி)

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், குறிகட்டுவான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி தேவராசன் பர்வதம் (பவானி) அவர்கள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பழனிக்குமார் சுப்புலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், ஜீலின் னோனா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், தேவராசன் அவர்களின் அன்பு மனைவியும், கிஷாந்தன், கேசிகன், கரிஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான ராசாத்தி மற்றும் முருகானந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு […]

“கோப்புகளுக்காகக் காத்திருக்க வைக்கும் அரசை யாரும் விரும்புவதில்லை!” – அசுர வேக ஒற்றைச் சாளர ஒப்புதல் குறித்து அமைச்சர் கீர்த்தனா மாஸ் ரீல்ஸ் வீடியோ வைரல்!

சென்னை: “தமிழ்நாடு இனி வருங்காலத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கப் போவதில்லை, அதை இப்போதே நாங்கள் கட்டமைக்கத் தொடங்கிவிட்டோம்; தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களைக் கோப்புகள் மற்றும் அனுமதிகளுக்காக மாதக்கணக்கில் காத்திருக்க வைக்கும் மந்தமான அரசை யாரும் விரும்புவதில்லை” என்று புதிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) மூலம் அசுர வேக அதிரடி அழைப்பு விடுத்துள்ளார். முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதலே, நிர்வாக ரீதியாகவும் தொழில்நுட்ப […]

இனி நீங்கள் தனி மரம்தான்”: தாயின் மறைவிற்கு முன் தந்தை அனுப்பிய மர்மமான குரல் செய்தி!

கேம்லூப்ஸ் (மே 27, 2026): தனது முன்னாள் மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள விட்டாலி ஸ்டீஃபன்ஸ்கி (Vitali Stefanski) மீதான விசாரணையில், அவரது 18 வயது மகள் செலினா மார்ட்டின் (Selina Martin) சாட்சியம் அளித்தார். தன் தாய் காணாமல் போன அன்று காலை, தனது தந்தை ரஷ்ய மொழியில் தனக்கு ஒரு வாட்ஸ்அப் குரல் செய்தியை அனுப்பியதாக அவர் தெரிவித்தார். குரல் செய்தியில் இருந்தது என்ன? நீதிமன்றத்தில் ஒலிக்கப்பட்ட அந்தப் பதிவில் விட்டாலி கூறியதாவது: […]

“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் என் பயணம்!” – தவெக இணைப்பு யூகங்களுக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அசுர வேக அதிரடி விளக்கம்!

புதுக்கோட்டை: “எனக்கு எப்போதுமே எனது தொகுதி மக்கள்தான் மிக முக்கியம்; தவெக-வில் இணையப் போவதாக வெளியாகும் தேவையற்ற யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா காட்டிய தூய்மையான பாதையிலேயே எனது அரசியல் பயணம் எப்போதும் தங்குதடையின்றித் தொடரும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அசுர வேகத்தில் அதிரடிப் பேட்டி அளித்துள்ளார். நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்து 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியதைத் தொடர்ந்து, […]

எட்டு வயதுச் சிறுவனின் வாயில் சூடு வைத்த தந்தை கைது

மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவனின் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த குற்றச்சாட்டில் குறித்த சிறுவனின் தந்தை வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 3 இல் கல்வி கற்று வரும் சிறுவன், வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்துள்ளான். இது தொடர்பாகச் சிறுவனின் பெற்றோரிடம் பாடசாலை ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார். இதனால் சிறுவனின் தந்தை மகன் மீது கடும் கோபமடைந்து, சிறுவனைப் பிடித்து, இரும்பு கம்பியை […]