காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம்’ என்பது அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆறாத கண்ணீர்

வட மாகாணத்தைப் பொறுத்தவரை, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம்’ என்பது வெறும் அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆறாத கண்ணீரோடும், பல தசாப்த கால ஏறுமாறான காத்திருப்போடும், விவரிக்க முடியாத வலியோடும் பின்னிப்பிணைந்த ஓர் அதிஉணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையாகும். அந்த உணர்வோடு அதை அணுகவேண்டும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு […]

இன்றுடன் 259 மனித எலும்புத் தொகுதிகள் செம்மணியில் அடையாளம் காணப்பட்டன!

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (07) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி நிரஞ்சன், இன்றுடன் 259 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 254 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வடமேற்கு பகுதியாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சில எலும்புத் தொகுதிகளின் இருப்புகள் அடையாளம் காணப்பட்டிருப்பதால் எத்தனை என்பு […]

ஐக்கிய இராச்சியத்தில் 2040களில் ஒலிம்பிக்?

ஒலிம்பிக், பராஒலிம்பிக்கை 2040களில் நடத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. முதற் கட்டமாக உத்தேச செலவு, சமூக-பொருளாதார நன்மை, வெற்றி வாய்ப்பு போன்ற முக்கிய விடயங்கள் ஆராயப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இலண்டன் 2040 ஒலிம்பிக்கை நடாத்த இலண்டன் போட்டியிட விரும்புவதாக அந்நகர மேயர் சாதிக் கான் தெரிவித்திருந்தார்.

2.5 மில்லியன் டொலர் சைபர் கொள்ளை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும்: பொருளாதார நிபுணர் எச்சரிக்கை

நிதி அமைச்சின் திறைசேரியில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை மற்றும் வங்கி மோசடி சம்பவங்கள், இலங்கையின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் கடன் வழங்குநர்களின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் என முன்னணி பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மே 4 ஆம் திகதி நடைபெற்ற “மத்திய கிழக்கு போரின் நிழலில் உலகப் பொருளாதாரம்: இலங்கையின் கடனில் அதன் தாக்கங்கள்” என்ற தலைப்பிலான மூலோபாய கலந்துரையாடலில் உரையாற்றிய கலாநிதி கணேஷன் விக்னராஜா இந்த கவலைகளை வெளியிட்டார். […]

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை: 21 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு – ஆனந்த விஜேபால

நிதி அமைச்சில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சைபர் கொள்ளை (Cyber Theft) சம்பவம் தொடர்பாக இதுவரை 21 நபர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்தார். திறைசேரியின் (Treasury) 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றியமை குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் யாராவது கண்டறியப்பட்டால், […]

செயின்ட் ஆல்பர்ட்டில் இனவெறி வசவுகளுடன் தாக்குதல்: ஒருவர் கைது – RCMP

 செயின்ட் ஆல்பர்ட் (St. Albert) பகுதியில் இனவெறி வசவுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒருவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மே மாதம் 1-ஆம் திகதி மதியம் 2:30 மணியளவில் பொய்ரியர் அவென்யூ (Poirier Avenue) மற்றும் பார்க்வுட் டிரைவ் (Parkwood Drive) பகுதியில் தாக்குதல் ஒன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு (RCMP) பல அழைப்புகள் கிடைத்தன. சாட்சிகள் வழங்கிய சந்தேக நபர் மற்றும் வாகனத்தின் விபரங்களை வைத்து, செயின்ட் ஆல்பர்ட் பகுதியைச் […]

வோகன் நகரில் வீடு தீப்பற்றியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

வோகன் (Vaughan) நகரில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்ததை அடுத்து, அது குறித்து விசாரணை நடத்த ஒன்ராறியோ தீயணைப்புத் தளபதியின் அலுவலகம் (Office of the Ontario Fire Marshal) அழைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு வுட்பிரிட்ஜ் (Woodbridge) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து 68 வயதுடைய முதியவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிப்லிங் அவென்யூ (Kipling Avenue) மற்றும் ஹைவே 7-க்கு அருகில் உள்ள எல்லர்பி […]

ஈஸ்ட் யார்க்கில் பெண் ஒருவருக்கு கத்திக்குத்து: சந்தேக நபர் கைது – பொலிஸ்

ஈஸ்ட்டேல் அவென்யூ (Eastdale Ave) மற்றும் லம்ஸ்டன் அவென்யூ (Lumsden Ave) பகுதிக்கு அருகே இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 40 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு ஈஸ்ட் யார்க்கில் (East York) இடம்பெற்ற இந்த மோதலில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மற்றொரு பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு பெண்களுக்கு இடையே சண்டை நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இரவு 10:40 மணியளவில் பொலிஸார் அப்பகுதிக்கு […]

முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனத்தை விரைவாக வழங்குமாறு வெகுசன ஊடக அமைச்சைக் கோரிய ரவிகரன் எம்.பி; விரைவாக வழங்கப்படுமென்கிறார் – பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன

முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவாக வழங்கப்படும் என கடந்த 08.04.2026அன்று வெகுசன ஊடக பிரதியமைச்சரால் தம்மிடம் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுசன ஊடக அமைச்சு இந்தவிடயத்தில் விசேட கவனத்தைக் கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் 07.05.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடமே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இத்தகைய சூழலில் முல்லைத்தீவிற்கான […]

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: ஆளுநரைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! தவெக-வின் இழுபறியால் மாறும் காட்சிகள்!

சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறிக்கு இடையே, தமிழக அரசியல் களம் இன்று மாலை ஒரு மிக முக்கியமான அதிரடித் திருப்பத்தைச் சந்திக்க உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து 40 நிமிடங்கள் ஆலோசித்தும், ஆட்சி அமைக்க இன்னும் அழைப்பு விடுக்கப்படாத நிலையில், இன்று மாலை 4 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார். முன்னதாக, ஆளுநரைச் சந்தித்த விஜய், […]