இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, அணித்தலைவர் தோமஸ் றியூவின் 110 (107), கலெப் பல்கனரின் 40 (53), பர்ஹான் அஹ்மட்டின் ஆட்டமிழக்காத 28 (26), ஜோசப் மூர்ஸின் 25 (33), பென் மேய்ஸின் 24 […]
யாழ். சிறைச்சாலையில் இருவருக்கு பொது மன்னிப்பு

சுதந்திர தினத்தையொட்டி இன்று புதன்கிழமை (04) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி சீனிவாசன் இந்திரகுமார் தலைமையில் குறித்த 2 சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். கசிப்பு வழக்கு ஒன்றுக்காக தண்டப்பனம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோம்பாவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை வைத்திருந்த ஐவர் கைது
புதுக்குடியிருப்பு பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை, முல்லைத்தீவு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோம்பாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மன்னார், வலைஞர்மடம், திம்பிலி மற்றும் கைவேலி ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 முதல் 28 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வெகனார் வாகனத்தில் போதைப்பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் […]
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு

அனைவரின் தொழில்முறை கண்ணியத்தையும், மரியாதையையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகளை நேற்று(3) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுமார் 7 வருடங்களாகப் பாடசாலைகளில் பணியாற்றியுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தாம் எதிர்கொண்ட தொழில்முறை மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து அதன் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளித்துள்ளனர். நிலவும் பிரச்சினைகளுக்குத் […]
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானம்?

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் ஊடக செய்திகள் தொடர்பாக நேற்று (03) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அங்கு இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்பு செயலாளரும் விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறிய அமைச்சர், இவ்வாறான செய்திகளை சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக […]
அமுலுக்கு வந்தது பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம்

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநயாகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று(03) கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தினார். இந்த சட்டமூலம் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்றாகும். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2025 நவம்பர் 21 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரினால் 2025 டிசம்பர் 3 ஆம் […]
இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் […]
தமிழ் பெண் ஒருவர் தென்னிலங்கையில் படு கொலை

தென்னிலங்கையில் தமிழ் பெண்ணொருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்லவத்தை, மகம கிரிவானகெட்டிய தோட்ட குடியிருப்பில் வசித்து வந்த 77 வயதான பெருமாள் லட்சுமி என்ற வயோதிப பெண் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவன் உயிரிழந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அதற்காக அன்னதானம் வழங்கும் நிகழ்விற்கு வீட்டினை தயார் செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று மதியம் வீட்டின் வர்ணம் பூசும் பணிகளை முடித்துவிட்டு, தொழிலாளிக்கு சம்பளம் வழங்கிய பின்னர் […]
சாவகச்சேரி தனங்கிளப்பு காணி ஒன்றுக்குள் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் வசிக்கும் ஒருவரது காணிக்குள் சில வெடிபொருட்கள் நேற்றையதினம்(03.02.2026) மீட்கப்பட்டுள்ளது. துப்பரவு பணியில் ஈடுபட்டபோது குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மோட்டார் குண்டு, ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினர் மூலம் வெடிபொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை இணைய வழி மூலம் செலுத்தும் முறை அறிமுகம்!

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் நுவரெலியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி நுவரெலியா பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவினர், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் […]