தனிப்பட்ட தகராறு; ஒருவர் கொலை

ம்பிலிப்பிட்டிய வீரசிங்கபுர பகுதியில் நேற்று (23) தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர் வீரசிங்கபுர, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என்று எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போதைய விசாரணையில், இந்தக் கொலை மூன்று நபர்களால் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவிக்கின்றது. சிறைச்சாலை குறித்து வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் புதிய கட்டடங்களை நிர்மாணித்து கைதிகளை விரைவில் அங்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்கள் சிலவற்றின் கட்டங்களை தெரிவு செய்து அவற்றை தற்காலிக சிறைச்சாலைகளாக பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டொராண்டோவின் வானிலை: கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு

GTA பகுதியில் கடுமையான குளிர்கால வானிலை வார இறுதியில் தொடங்கியுள்ளது. வானிலை முன்னறிவிப்புகளின்படி, மிகவும் குறைந்த வெப்பநிலைகளும், அதிகபட்சமாக 30 செ.மீ. வரை பனிப்பொழிவு ஏற்படுத்தக்கூடிய ஒரு பனிப்புயலும் எதிர்பார்க்கப்படுகிறது. டொராண்டோ நகரம் தற்போது கடும் குளிர் காரணமாக மஞ்சள் எச்சரிக்கையின் கீழும், ஞாயிற்றுக்கிழமைக்கான குளிர்கால புயல் தொடர்பாக மஞ்சள் கண்காணிப்பு நிலையிலும் உள்ளது. கீழ்வரும் காலவரிசை, எந்விரான்மெண்ட் கனடா மற்றும் CBC டொராண்டோ வானிலை நிபுணர் கொலெட் கெனெடி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும். குளிர் […]

ஏ.ரி.எம் இயந்திரங்களில் கொள்ளை?

தென்னிலங்கையில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி, அவர்களின் அட்டைகளிலிருந்து மோசடியாக பணம் பெற்ற நபரை கைது செய்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெபிதிகொல்லேவவைச் சேர்ந்த 39 வயதுடைய இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து முதியவர்களுக்கு பணம் எடுக்க உதவியதாக கூறப்படும் சந்தேக நபர், அவர்களின் அட்டைகளை எடுத்து அவர்களின் கடவுச்சொற்களைக் கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தன்னிடம் இருந்த அதே அட்டையுடன் கவனமாக அட்டையை மாற்றி, பின்னர் இயந்திரத்தில் […]

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா; சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு எதிராக வழக்கு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பட்ட திருவிழாவின் போது சுகாதார விதிமுறைகளை பேண தவறிய 24 உணவு நிலையங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வழக்கு தாக்கல்(23.1.2026) செய்தார். கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட திருவிழாவின் போது, மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை, திண்மக்கழிவுகளை திறந்த வெளியில் அப்புறப்படுத்த காரணமாக அமைந்தமை, […]

தனியார், அரச சார்பு துறையினருக்கு ஓய்வூதியம்?

தனியார் துறை மற்றும் அரச சார்பு நிறுவனங்களுக்கு (Semi-government) ஓய்வூதியம் ஒன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். நேற்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். “EPF மற்றும் ETF ஆகிய இரண்டு நிதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை நான் மிகத் தெளிவாகக் கூறினேன். நாங்கள் EPF நிதியை ஓய்வூதியமாக மாற்றப்போவதாக நான் கூறவில்லை. நான் கூறிய விடயம் தவறாகப் போய்ச் சேர்ந்துள்ளது. இந்த […]

வவுனியா பல்கலையில் முதலாவது தொழில்நுட்ப சேவை ஆதரவு நிலையம்

முதலாவது தொழில்நுட்ப சேவை, ஆதரவு நிலையம் வவுனியா பல்கலையில் திறப்பு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் முதலாவது தொழில்நுட்ப சேவை மற்றும் ஆதரவு நிலையம் வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (23) திறந்து வைக்கப்பட்டது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரின் தலைமையில் இது திறந்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் தொழில்முயற்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை வணிகமயமாக்கல் மற்றும் […]

பணியாற்றியபோது கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கட்டாரில் பணியாற்றியபோது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக, 197 மில்லியன் ரூபாவுக்கும் அதிக இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொடுக்க தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் 2025 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுத்துள்ளது. தூதரகத்தினால் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை 197,719,710.36 ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் 23,641,182.00 ரூபா பணம் தூதரகத்தின் ஊடாக நேரடியாக உரிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 174,078,528.36 ரூபா பணம், இலங்கையிலுள்ள குடும்ப உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் […]

காரை கைவிட்டு துப்பாக்கியுடன் சென்ற சந்தேகநபர் கைது

கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் கார் ஒன்றைக் கைவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவிய ஒருவரும் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை, ஒலியமுல்ல பகுதியில் வைத்து 20 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயினுடன் பிரதான […]

இன்றும் வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 48 மணித்தியாலங்களின் பின்னரும் பணிப்பகிஷ்கரிப்பை மேலும் நீடிப்பதா என்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் […]