மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகள் இரு கட்டங்களாக திறக்கப்படும்

‘திட்வா’ புயலுடன் நாட்டுக்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச தெரிவித்தார். ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், இரண்டு திகதிகளின் கீழ் ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதற்கமைய, கடுமையாக அனர்த்தத்திற்கு உள்ளான பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் நாளை (16) ஆம் திகதியும், பாதிக்கப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம் […]

“என்று தணியும்” நூல் வெளியீடு; செம்மணி புதைகுழியின் அவலங்களை சித்தரிக்கும் நூல்

யாழ். பல்கலைக்க ஊடகத்துறை மாணவி புவஸ்டினா மெய்யழகன் எழுதிய “என்று தணியும்” நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இராமநாதன் வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக பளை பிரதேச செயலாளரும் கவிஞருமான ஜெயசீலன் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ம. இளம்பிறையன் கலந்து கொண்டார். தமிழ் மக்களின் வலி சுமந்த செம்மணி மனித புதைகுழியின் அவலங்களை சித்தரிக்கும் சம்பாசனையுடன் கூடிய நாவல் வடிவமாக இந்த நூல் […]

இ.போ.ச. பஸ்களில் பயணிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு …

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள், இந்தமாதம் முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் நவம்பர் மாத பருவகால சீட்டை பயன்படுத்தி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த மாத பருவகால சீட்டை வழங்குவதன் மூலம் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். அண்மைய அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கெப் வாகனம் விபத்து; இரு சுற்றுலாப் பயணிகள் காயம்!

யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு சுற்றுலாப் பயணிகளும் யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் விடுதியை நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகளும் கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை; விசாரணை ஆரம்பம்

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியில் மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர். இந்த நேரத்தில் மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத உணவு […]

கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரைத் தாக்கியவர் கைது

கண்டி – குகாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீதியில் மண் மற்றும் கற்களை அகற்றிக் கொண்டிருந்த ஊழியருக்கும், அவ்வீதியில் பயணித்த லொறி ஒன்றிலிருந்த நபருக்கும் இடையில் நேற்று (14) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது […]

பீப்பாயில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

கற்பிட்டி, முஸல்பட்டி கிராமத்தில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையொன்று, அரைவாசி நீர் நிரப்பப்பட்டிருந்த பீப்பாய் (Barrel) ஒன்றிற்குள் விழுந்து துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தது. கற்பிட்டி, முஸல்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ஒரு வயது மூன்று மாதங்களான குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. குழந்தையின் பாட்டி திடீரென உயிரிழந்ததால் தந்தை நுவரெலியாவிற்குச் சென்றிருந்த நிலையிலும், தாய் கடுமையாக சுகவீனமுற்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போதே அச்சிறுமி இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார். குழந்தை ஏனைய குழந்தைகளுடன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே, அவர் […]

பிரேசிலில் முன்னாள் அதிபருக்கு ஆதரவான மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டு சிறை தண்டனையை குறைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசிலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரேசிலில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில், அப்போதைய அதிபராக இருந்த போல்சனாரோ அதிர்ச்சி தோல்வியடைந்தார். தேர்தலில் நடந்த முறைகேடு தான் தன்னுடைய தோல்விக்கு காரணம் எனக் குற்றம்சாட்டிய போல்சனாரோ, புதிய அரசு அமைவதை தடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தல், ஆட்சியை கவிழ்க்க முயன்றது உள்ளிட்ட […]

மொராக்கோவில் கனமழை; 21 பேர் உயிரிழப்பு

மொராக்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக மழையின் வறட்சி நிலவி வருகிறது. இந்த சூழலில், கடந்த சில தினங்களாக அந்நாட்டில் கனமழை மற்றும் அதிக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில், அட்லாண்டிக் கடற்கரை மாகாணமான சபியில் பேய் மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களின் வீடுகள் மற்றும் கடைகளை வெள்ளம் சூழ்ந்தன. […]

ஹாலிவுட் இயக்குநரும் அவரது மனைவியும் கொலை!

லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பிரென்ட்வுட் வீட்டில் 78 வயது மற்றும் 68 வயதுடைய தம்பதி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாக நேற்று போலீசார் தகவல் தெரிவித்தனர். உயிரிழந்த நபர்கள் குறித்து ஆரம்பத்தில் விபரம் வெளியாகாத நிலையில், பின்னர் அது ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது […]