200 ரூபா கொடுப்பனவுக்குச் சட்ட அங்கீகாரம் அவசியம்!

தோட்டத் தொழிலாளர்களின் 200 ரூபா கொடுப்பனவுக்குச் சட்ட அங்கீகாரம் அவசியம்!
அரசாங்கத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 200 ரூபா நாளாந்த வரவுக் கொடுப்பனவுக்குச் சட்டப்பூர்வமான பின்னணியை உருவாக்குமாறு அரச நிதிப் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நடைபெற்ற அரச நிதிப் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது விடயங்களை விரிவாக விளக்கிய குழுவின் தலைவர், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்குக் குழு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், எனினும் இந்தக் கொடுப்பனவை வழங்கும் முறைமை தொடர்பான சட்டப்பூர்வமான நிலைமை குறித்துக் கட்டாயம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைவாக, எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலும் இன்றி தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், இதனை எந்த நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த 200 ரூபா தொகை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பாகச் சேர்க்கப்படுவதில்லை என அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் 3 வருட காலத்திற்குச் செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்தப் காலக்கெடு முடிவடைந்ததன் பின்னர் இந்தக் கொடுப்பனவுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

உரிய நிதி ஒழுக்கமின்றி அரச நிதியைப் தனியார் நிறுவனங்களின் சம்பளம் வழங்குவதற்காகப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என அரச நிதிப் பற்றிய குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன்போது, 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பாராளுமன்றத்தினால் இந்த நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையாலேயே உரிய கொடுப்பனவு வழங்கப்படுவதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி, இந்தக் கொடுப்பனவிற்கான ஏற்பாடுகள் ‘அபிவிருத்தி மானியமாகவே’ சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பொதுவாக அபிவிருத்தி மானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், இந்தக் கொடுப்பனவை ‘உற்பத்தி ஊக்குவிப்பு’ என அழைப்பதே மிகவும் பொருத்தமானது என பிரதி திறைசேரிச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், நடைமுறையில் ஜனவரி மாதத்திற்காக இதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவுகளிலோ அல்லது உரிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலோ அவ்வாறான தேவையொன்று குறிப்பிடப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. மேலும், நாளாந்தம் வழங்கப்படும் 200 ரூபா கொடுப்பனவை ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் கணக்கீட்டிலிருந்து தவிர்ப்பது உரிய சட்டங்களுக்கு அமையுள்ளதா என்பது குறித்தும் குழு கேள்வியெழுப்பியது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்துச் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டீர்களா என வினவியபோது, சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கமைவாக, இவ்வாறான சிக்கலான இடங்கள் திருத்தப்பட வேண்டும் எனவும், இந்தக் கொடுப்பனவு தொடர்பில் ஏதேனுமொரு சட்டப்பூர்வமான பின்னணி உருவாக்கப்பட வேண்டும் எனவும் அரச நிதிப் பற்றிய குழு திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்