200 ரூபா கொடுப்பனவுக்குச் சட்ட அங்கீகாரம் அவசியம்!

தோட்டத் தொழிலாளர்களின் 200 ரூபா கொடுப்பனவுக்குச் சட்ட அங்கீகாரம் அவசியம்!
அரசாங்கத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 200 ரூபா நாளாந்த வரவுக் கொடுப்பனவுக்குச் சட்டப்பூர்வமான பின்னணியை உருவாக்குமாறு அரச நிதிப் பற்றிய குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நடைபெற்ற அரச நிதிப் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது விடயங்களை விரிவாக விளக்கிய குழுவின் தலைவர், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்குக் குழு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், எனினும் இந்தக் கொடுப்பனவை வழங்கும் முறைமை தொடர்பான சட்டப்பூர்வமான நிலைமை குறித்துக் கட்டாயம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைவாக, எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலும் இன்றி தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும், இதனை எந்த நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த 200 ரூபா தொகை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பாகச் சேர்க்கப்படுவதில்லை என அதிகாரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் 3 வருட காலத்திற்குச் செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்தப் காலக்கெடு முடிவடைந்ததன் பின்னர் இந்தக் கொடுப்பனவுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

உரிய நிதி ஒழுக்கமின்றி அரச நிதியைப் தனியார் நிறுவனங்களின் சம்பளம் வழங்குவதற்காகப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என அரச நிதிப் பற்றிய குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன்போது, 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பாராளுமன்றத்தினால் இந்த நிதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையாலேயே உரிய கொடுப்பனவு வழங்கப்படுவதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி, இந்தக் கொடுப்பனவிற்கான ஏற்பாடுகள் ‘அபிவிருத்தி மானியமாகவே’ சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பொதுவாக அபிவிருத்தி மானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், இந்தக் கொடுப்பனவை ‘உற்பத்தி ஊக்குவிப்பு’ என அழைப்பதே மிகவும் பொருத்தமானது என பிரதி திறைசேரிச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், நடைமுறையில் ஜனவரி மாதத்திற்காக இதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவுகளிலோ அல்லது உரிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலோ அவ்வாறான தேவையொன்று குறிப்பிடப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. மேலும், நாளாந்தம் வழங்கப்படும் 200 ரூபா கொடுப்பனவை ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் கணக்கீட்டிலிருந்து தவிர்ப்பது உரிய சட்டங்களுக்கு அமையுள்ளதா என்பது குறித்தும் குழு கேள்வியெழுப்பியது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்துச் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டீர்களா என வினவியபோது, சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கமைவாக, இவ்வாறான சிக்கலான இடங்கள் திருத்தப்பட வேண்டும் எனவும், இந்தக் கொடுப்பனவு தொடர்பில் ஏதேனுமொரு சட்டப்பூர்வமான பின்னணி உருவாக்கப்பட வேண்டும் எனவும் அரச நிதிப் பற்றிய குழு திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது