110 வயதில் திருமணம் செய்து தந்தையானவர்; 142 வயதில் காலமானார்!

சௌதி அரேபியாவில் மிக வயதான நபர் என்று அறியப்பட்டு வந்த ஷேக் நாசர் பின் ராடன் அல் ரஷீத் அல் வாடா, தன்னுடைய 142-வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார்.

சௌதி அரேபியாவின் வரலாற்றில் புதிய நாடாக உருவானது முதல், அதன் அனைத்து ஆட்சியாளர்களின் ஆட்சியிலும் இவர் வாழ்ந்திருக்கிறார் என்பது இவரது குடும்பத்தினர் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதாவது, சௌதி அரேபியாவின் நிறுவனர் மன்னர் அப்துலாஸிஸ் முதல், தற்போதைய மன்னர் சல்மான் வரை அனைவரின் ஆட்சியையும் இவர் பார்த்துள்ளார். இவரது வாழ்க்கை, வெறும் நீண்ட ஆயுளுக்கான உதாரணமாக மட்டுமல்லாமல், பக்தி, ஒழுக்கம் ஆகியவற்றுக்கும் முன்னுதாரனமாக மாறியிருக்கிறது.

வெறும் பாலைவனமாக இருந்த சௌதி அரேபியா, தற்போது நவீன நகரமாக மாறியிருப்பதை இவர் நேரடியாக தன்னுடைய கண்களால் கண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

2026ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி இவர் தன்னுடைய 142வது வயதில் காலமானார். இவரது பிறப்பு தேதி துல்லியமாக இருப்பின், இவர் 1800-ஆவது ஆண்டுகளில் பிறந்திருக்க வேண்டும். அப்போது சௌதி அரேபியா என்றொரு நாடே இருந்திருக்காது.

இவர் 40 முறை ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு தற்போது 134 பிள்ளைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன் பேத்திகள் இருக்கிறார்கள். இவர் கடைசியாக தன்னுடைய 110வது வயதில் திருமணம் செய்து ஒரு மகளும் பிறந்தார்.

இவரது இறுதிச் சடங்கில், அந்நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் சுமார் 7000 பேர் இறுதிச் சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 80 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.