10 ஆயிரம் வீட்டுத் திட்டம் 2027 இற்குள் நிறைவு பெறும் – காணி உரிமை வழங்குவது உறுதி

10 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் 2 ஆயிரத்து 56 வீடுகளுக்குரிய நிர்மாண பணி 12 ஆம் திகதி இடம்பெறும். 2026 இல் மேலும் 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். 2027 ஆகும்போது இந்த 10 ஆயிரம் வீட்டுத் திட்ட பணியை நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம் என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

பெருந்தோட்டப்பகுதிகளில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வரையான குடும்பங்கள் லயன்களில் வாழ்கின்றன. மலையக மக்களுக்கென காணி இல்லை, வீடு இல்லை, முகவரிகூட இல்லை. இவற்றை நாம் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டினோம். தற்போது பிரச்சினைகளைப் பற்றி பேசும் உரிமை எமக்கு கிடையாது.
ஏனெனில் தற்போது தீர்வை வழங்க வேண்டிய தரப்பில் நாம் இருக்கின்றோம். அதனால் தீர்வை வழங்க முயற்சிக்கின்றோம்.

2 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ள நிலையில் 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை. எனவே, மாற்று யோசனை பற்றி ஆராயப்படுகின்றது. காணியை வழங்கினால் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்குரிய இயலுமை சிலருக்கு உள்ளது. இப்பிரச்சினை அடுத்த தலைமுறைக்கு செல்லகூடாது. பல ஆட்சிகள் வரும்வரை காத்திருக்கவும் கூடாது. எம்மால் முடிந்தளவுக்கு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

காணி உரிமையென்பது அரசுக்கானது, தோட்ட நிறுவனத்துக்கானது எனக் கூறி காணி வழங்குவதில் பயன் இல்லை. அவ்வாறு வழங்கினால் மீண்டும் லயன் சிஸ்டத்துக்கே சென்றுவிடும். காணி உரிமை , உரித்து சகிதம் வழங்கப்படும். 12 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறும் நிகழ்வின்போது ஏற்கனவே வீடுகளைப் பெற்றவர்களுக்கு காணி உரித்துக்குரிய பத்திரம் வழங்கப்படுகின்றது. எனவே, காணி உரிமையை வழங்குவோம்.

பெருந்தோட்டப்பகுதிகளில் எல்.ஆர்.சி. இடங்களே உள்ளன. எல்.ஆர்.சி. இடங்கள் மக்களுக்கு வழங்கப்படும் நடைமுறைகள் உள்ளன. சிலவேளை குத்தகை அடிப்படையில் வழங்கப்படுகின்றது. சிலவேளை மானியமாக வழங்கப்படுகின்றது. ஆனால் மக்களுக்கே உரிமையாகும் வகையில்தான் (12 ஆம் திகதி) காணி உரிமை வழங்கப்படுகின்றது.

“சின்னக்கர” (அசல்) என்ற வசனம் மாறுபட்டாலும் மக்களுக்கே இடத்தின் உரிமை இருக்கும்.

வழங்கப்படும் காணியை , வீட்டை மற்றைய நபருக்கு விற்பனை செய்துவிட்டு மீண்டும் லயத்துக்கு சென்றால் அதுவும் பிரச்சினையாகும். குறிப்பாக மகாவலி பிரதேசத்தில் காணி வழங்கும்போது, பயனாளி ஒருவர் தனது பிள்ளைக்கு கைமாற்றலாம். காலம் சென்ற பிறகே அதனை விற்க முடியும். ஆனால் 12 ஆம் திகதி வழங்கப்படும் உரித்தை பயனாளி அனுபவிக்கலாம். கைமாற்ற நினைத்தால் மாற்றலாம். எனினும், ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி ஆராயப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து