ஸ்ரீதேவி மகளை தரையில் தூங்கவிட்ட வாரிசு நடிகர்!

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை பாரீஸில் தரையில் தூங்க வைத்திருக்கிறார் பாலிவுட் நடிகர் வருண் தவான். ஏம்பா பொம்பள புள்ளய இப்படியா தரையில் படுக்க வைப்பது என்று கேட்டால் காரணம் சொல்கிறார்.

பாலிவுட் நடிகர் வருண் தவானும், நடிகை ஜான்வி கபூரும் முதல் முறையாக சேர்ந்து நடித்த படம் பவால். அந்த படத்தில் கணவன், மனைவியாக நடித்தபோது அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். இதையடுத்தே அக்டோபர் 2ம் திகதி திரைக்கு வந்த Sunny Sanskari Ki Tulsi Kumari படத்திலும் சேர்ந்து நடித்தார்கள்.

அந்த படத்தை விளம்பரம் செய்தபோது வருண் தவானும் சரி, ஜான்வி கபூரும் சரி பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டனர். அப்படித் தான் ஜான்வி கபூர் தரையில் படுத்து தூங்கியது தெரிய வந்தது. என்னை தரையில் தூங்கவிட்டார் வருண் தவான் என்று ஜான்வி கூறியதை கேட்ட அவர் தெரிவித்ததாவது,

பவால் ஷூட்டிங்கிற்காக பாரீஸ் சென்றபோது ஒரு லவுஞ்சில் தங்கினோம். அங்கு சோபாவில் படுத்து தூங்கலாம் என்று பார்த்தால் இடம் இல்லை. வேறு யாரோ தூங்கிக் கொண்டிருந்தார்கள். இதையடுத்தே நானும், ஜான்வியும் தரையில் படுத்து தூங்கினோம். சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்தபோது சோபாவில் தூங்கியவர்கள் அங்கு இல்லை. உடனே நான் சோபாவில் படுத்துக் கொண்டேன். ஜான்வி கபூர் தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை எழுப்பவில்லை என்றார்.

சோபாவில் இடம் இருக்கு வானு ஏன் என்னை எழுப்பவில்லை என்று ஜான்வி கபூர் கேட்டார். அதற்கு வருண் தவானோ, நான் எழுப்பியிருந்தால் தூக்கத்தை ஏன் கெடுத்தனு கேட்பார். அதனால் எழுப்பவில்லை என்றார்.

சோபா விஷயத்திற்கு பழி வாங்க விமானத்தில் பயணம் செய்தபோது எனக்கு ஏதோ டிரக் கொடுத்துவிட்டார் ஜான்வி கபூர் என்று தெரிவித்தார் வருண் தவான். நான் அவருக்கு டிரக் எல்லாம் கொடுக்கவில்லை. வருணுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது அதனால் தூக்க மாத்திரைகள் தான் கொடுத்தேன் என்றார் ஜான்வி கபூர்.

முன்னதாக பவால் படத்தில் மனைவி மீது விருப்பம் இல்லாத கணவராக வருண் தவான் நடிக்க வேண்டியது இருந்தது. ஆனால் ஜான்வியை சந்தித்து பேசியதுமே இவர் நமக்கு நெருக்கமான தோழியாகிவிடுவார் என்று வருண் தவானுக்கு தோன்றியிருக்கிறது. இதையடுத்தே ஷூட்டிங்ஸ்பாட்டில் ஜான்வி கபூரை பார்த்தாலும் பார்க்காத மாதிரி பேசாமல் இருந்திருக்கிறார் வருண்.

ஜான்வியிடம் பேசாமல் இருந்தால் தான் நெருக்கமில்லாத கணவன், மனைவியாக நடிக்கும்போது நன்றாக இருக்கும் என்று நினைத்து அப்படி செய்தாராம். ஆனால் இது தெரியாத ஜான்வியோ வருண் ஏன் தன்னிடம் பேசாமல் இருக்கிறார் என்று குழம்பியிருக்கிறார்.

இதற்கிடையே வருண் தவானின் எனர்ஜி தன் அம்மா ஸ்ரீதேவியை வியக்க வைத்தது என்றார் ஜான்வி கபூர். தான் ஜுத்வா 2 படத்தில் நடிக்க ஸ்ரீதேவி இரண்டு வேடங்களில் நடித்த சால்பாஸ் படத்தை பலமுறை பார்த்ததாக கூறினார் வருண் தவான். ஜுத்வா 2 படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க அது மிகவும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்