ஸ்டாலினின் ஆட்சி தான் அமையும்; கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை – வைகோ

”தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சி தான் அமையும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சிற்கு இடமில்லை ” என மதிமுகவின் பொதுச்செயலாளரான வைகோ பேசியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக எதிர்வரும் 23 ஆம் திகதியன்று பொது தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், கட்சியின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே. என். நேருவை ஆதரித்து திருச்சி உறையூர் பகுதியில் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது….

நான் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதற்காக என்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவன். ஐந்தரை ஆண்டு காலம் சிறையில் இருந்தவன்.

6000 கிலோ மீற்றர் தொலைவிற்கு நடைபயணம் மேற்கொண்டவன். ஸ்டெர்லைட்காக போராடியவன். தூத்துக்குடியில் 13 உயிர்களை காவு வாங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் ஏஜென்ட்டாக புரோக்கராக… எடப்பாடி மாறியதால் தான் அந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அதே போல் சாத்தான் குளத்திலும் தந்தை – மகன் அடித்து கொல்லப்பட்டதற்கும் அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுதான் பொறுப்பு.

உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணவத்துடன் திமுகவை வேருடன் பிடுங்கி எறிவேன் என்கிறார். இதே போல் அண்ணாமலையும் கூறுகிறார். யாராலும் அதை செய்ய முடியாது. திமுக தியாகத்தால் கட்டப்பட்ட கோட்டை. 75 ஆண்டு கால பாரம்பரிய திமுகவை தோற்கடிப்போம் என பேசினால்… அது ஜனநாயக உரிமை. ஆனால் மண்ணுடன் கலந்திருக்கக்கூடிய இயக்கத்தை வேருடன் பிடுங்கி அழிப்போம் என்கிறார்கள். இது நடக்காது.

திராவிட இயக்கத்தை நெஞ்சில் சுமப்பவன் நான். கலைஞருக்கு பக்கபலமாக எவ்வாறு நான் நின்றேனோ உற்ற துணையாக இருந்தேனோ அதேபோல் ஸ்டாலினுக்கும் இருப்பேன் என கலைஞரிடத்தில் உறுதி அளித்துள்ளேன்.

இந்த இயக்கத்தை சாய்ப்பதற்கு சனாதன சக்திகளும், அதன் வெறிபிடித்த கூட்டமும் இங்கே நுழைந்து விடக்கூடாது. அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு. தளபதி ஸ்டாலினின் நிர்வாகத்தில் இந்துக்கள்- இஸ்லாமியர்கள்- கிறித்தவர்கள்- என அனைவரும் சகோதரர்களாக வாழக்கூடிய சூழல் உள்ளது. வடநாட்டில் ரத்த களரிகள் ஏற்படுவதை போல் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்ற கூட்டத்தை தடுத்து, அதனை தகர்த்து தவிடு பொடியாக்க வேண்டிய கடமை எனக்கும் உண்டு.

சுயமரியாதை, சமூக நீதி ,சமத்துவம், சகோதரத்துவம் ,மதச்சார்பின்மை , கூட்டாட்சி கருத்தியல் கொண்ட இயக்கம் தான் திராவிட மாடல். இந்த ஆட்சியை நடத்துகிற இயக்கம் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் – கட்டணம் இல்லா மகளிர் விடியல் பயணம் – முதல்வர் காலை உணவு திட்டம் -புதுமைப்பெண் -தமிழ் புதல்வன்- நான் முதல்வன் -மக்களை தேடி மருத்துவம் -என பல்வேறு திட்டங்களை அறிவித்த நமது முதல்வரை.. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய முதல்வர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பின்பற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே என் நேரு கலைஞர் பேருந்து முனையும் -காய்கறி சந்தை- டைடல் பார்க் என பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளார். அதனால் அவர் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

தமிழ்நாட்டிற்கு எந்த மாநிலங்களிலும் இல்லாத புதிய மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தது ஸ்டாலின் தலைமையிலான அரசு. எனவே அந்த அரசு நீடிப்பதற்கான தீர்ப்பை தான் தமிழக மக்கள் வழங்குவார்கள். எங்கு திரும்பினாலும் உதயசூரியன் என்ற குரல் தான் கேட்கிறது. மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வராக பொறுப்பேற்பார். தமிழகத்தில் அடுத்து அமையப்போவது ஸ்டாலினின் திமுக தலைமையிலான ஆட்சி தான். கூட்டணி ஆட்சி அல்ல. அந்த நிலையை மக்கள் ஒருபோதும் ஏற்படுத்த மாட்டார்கள்” என பேசினார்.

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்