வேலணை பிரதேசத்திற்குள் அனுமதி பெறாத நுண் நிதி நிறுவனங்கள் உள் நுழையத் தடை

வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளில், நுண்கடன் நிதி நிறுவனங்கள் பிரதேச சபையின் அனுமதியின்றி செயற்பட முடியாது என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம், புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும் அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்துவது அவசியம் என வலியுறுத்தி உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த்  முன்மொழிவொன்றை சபையில் சமர்ப்பித்தார்.

முன் மொழிவை சமர்ப்பித்து சபையில் கருத்து தெரிவிக்கையில்,

 வறிய மக்களின் இலக்குவைத்து அதிக வட்டி வீதங்களுடன் பல நுண்கடன் நிதி நிறுவனங்கள் கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்திற்குள் நுழைந்து மக்களை அதன் பொறிக்குள் வீழ்த்தி ஏமாற்றி வருகின்றனர்.

எமது பிரதேச மக்கள் நிதிக்கான அவசர தேவை கருதி அதிகூடிய வட்டிகளுக்கு நிதியை பெற்றுக்கொள்கின்றனர்.அதன் பின்னர் குறித்த கடனை செலுத்துவதில் பெரும் இடர்களை சந்திக்கின்றனர்.

பின்னர் நிதி கட்டத்தவறும் கடனாளிகள் வீடுகளுக்கு நேரகாலம்.பாரது நிதி வசூலிக்கும் நபர்கள் சென்று பெரும் தொல்லை கொடுக்கும் நிலை உருவாகின்றது. அத்துடன்  கடன் பெற்றவர்களுக்கு மிக அழுத்தங்களை வசூலிப்போர் கொடுக்கின்ற நிலையும் காணப்படுகின்றது.

குறிப்பாக பெண் தலைமை குடும்பம் இக்கடனை பெற்றிருந்தால் குறித்த பெண்களுடன் தவறான முறையில் நடந்துகொள்ள சில வசூலிப்பாளர்கள் முயற்சிப்பது மட்டுமல்லாது அதற்கான மன அழுத்தங்களையும் கொடுக்கின்றனர்.

இதனால் தற்கொலை முயற்சிக்கு கடனாளர்கள் செல்லும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்படுகின்றது.

எனவே எமது பிரதேச மக்களது வறுமையை குறித்த நிறுவனங்கள் தமக்கான முதலீட்டு இடங்களாக பயன்படுத்துவதற்கு எமது சபை அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து உறுப்பினர் சு.பிரகலாதன் கருத்து தெரிவிக்கையில்,

சட்ட விதிகளை பேணாது எமது பகுதிக்குள் 40 இற்கும் அதிகமான நுண்கடன் நிறுவனங்கள் நுழைந்து மக்களுக்கு கடும் குடைச்சலை கொடுக்கின்றன. இந்த நிறுவனங்களில் பல பதிவுகள் அற்றவையாக இருக்கின்றன.

அத்துடன் இந்த நிறுவனங்களின் பாதிப்பு எமது மக்களுக்கு அதிகமாக வருகின்றது. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.

அதனை தொடர்ந்து உறுப்பினர் நாவலன் கருத்து கூறுகையில்,

 எமது மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த நிறுவனங்களை சபை ஊடாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் இனிவருங் காலத்தில் மக்கள் நுண் நிதி நிறுவனங்களை நாடாதிருக்க விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.

சில பிரதேச சபைகள் நுண் நிதி நிறுவனங்கள் தமது ஆளுகைக்குள் செல்வதையே தடைசெய்துள்ளது. அதுபோன்று எமது சபையும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என தெரிவித்தார்.

அதனை அடுத்து உறுப்பினர் பார்த்தீபன் கருத்து தெரிவிக்கையில்,

 மக்கள் தமக்கான நிதியின் அவசிய தேவையை நிவர்த்தி செய்ய இந்த நிறுவனங்களை நாடுகின்றனர். அதைத் தடுக்க நாம் எமது பிரதேசங்களில் உள்ள பொது அமைப்புக்கள் ஊடாக மக்கள் அவசர கடன் வசதி  பெறக்கூடிய பொறிமுறையை உருவாக்கி இந்த பிரச்சினைக்கு மாற்றீடாக தீர்வாக கொடுக்கலாம். அது தொடர்பில் எனது வட்டாரத்தில் ஒரு கட்டமைப்பை சட்ட ரீதியாக உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து உறுப்பினர் இதய தீபன் கருத்து தெரிவிக்கையில்,

 இந்த நுண்கடன் தொல்லையால் சில நாள்களுக்கு முன்னர் எனது கிராமத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.  சமூர்த்தி வங்கிகள் போன்ற அமைப்புகள் மக்களுக்கு இலகுவான முறையில் கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்வது அவசியம் என தெரிவித்தார்.

அதனை அடுத்து சபையின் தவிசாளர் அசோக்குமார் தலைமையில் , சபையின் அனுமதி பெறாது எந்த ஒரு நுண் நிதி நிறுவனமும் உள்நுழைய முடியாது. மாறாக நியாயமான வட்டி வீதங்களுடன் பிரதேச சபையின்  நியமங்களை ஏற்று  சபையின் அனுமதி பெற்றே செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறு சபையின் நிபந்தனைகளை  ஏற்றுக்கொள்ளாத  நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என  குறித்த முன்மொழிவு ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்