அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு பாராட்டு, மட்டக்களப்பில் வெள்ளம் தடுப்பதற்கான திட்டத்துக்கு 10,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி சிரேஷ்ட உறுப்பினர் இரா. துரைரெட்ணம் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள ஈ.பி,ஆர்.எல்.எப். கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த காலத்தில் பல விடயங்களை எந்த அரசும் செயல்படுத்ததாத செயல் திட்டங்களை இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதி செற்படுத்தினார். அதை வாழ்த்துகிறோம்.
அதேபோல மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் அரசாங்க அதிபர் தலைமையில் உள்ள திணைக்களங்கள் ஏனைய பிரதேச செயலாளர்கள் பிரதேச செயலகத்தோடு சம்பந்தப்பட்ட உள்ளடக்கிய சகலரும் ஒரு சிறப்பான பணியை ஆற்றியதற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிதி இருக்கும் பட்சத்தில் வெள்ளம் பல அனர்த்தங்களை தவிர்க்க முடியும். கிட்டத்தட்ட 10,000 கோடிக்கு மேற்பட்ட நிதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எதிர்கால வெள்ள அனர்த்தத்தை தவிர்ப்பதற்காக திட்டமிட்டு ஒதுக்கப்பட்டால் அரைவாசிக்கு மேற்பட்ட வெள்ள அனர்த்தத்தை தவிர்ப்பதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றன” என குறிப்பிட்டுள்ளார்.