வெற்றி தோல்வியின்றி நியூஸிலாந்துடனான டெஸ்டை முடித்துக்கொண்டது மே. தீவுகள்

நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லே விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளன்று ஜஸ்டின் க்றீவ்ஸ் குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் அப் போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது மேற்கிந்தியத் தீவுகள் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 457 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இதன் மூலம் தனது 6ஆவது டெஸ்டில் முதலாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளை மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுக்கொண்டது.

போட்டியின் கடைசி நாளான நேற்று மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு மேலும் 319 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 6 விக்கெட்கள் வீழ்த்தப்படவிருந்தது.

இந் நிலையில் இந்தப் போட்டியில் பெரும்பாலும் நியூஸிலாந்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஒன்பது மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 388 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்ட்றிகள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 202 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைவதை உறுதிசெய்தார்.

மேலும் நியூஸிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வெளிநாட்டவர் என்ற பெருமையை ஜஸ்டின் க்றீவ்ஸ் பெற்றுக்கொண்டார்.

அவர் தனது முதலாவது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் போட்டியை முடித்துக்கொள்ள இரண்டு அணியினரும் தீர்மானித்தனர்.

போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் 4 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களிலிருந்து ஜோடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷாய் ஹோப், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 196 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.

ஷாய் ஹோப் 5 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 234 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 140 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (268 – 5 விக்.)

மொத்த எண்ணிக்கை 277 ஓட்டங்களாக இருந்தபோது டெவின் இம்லக் (4) ஆட்டம் இழந்ததும் நியூஸிலாந்து வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கத் தொடங்கியது.

ஆனால், ஜஸ்டின் க்றீவ்ஸ், கெமர் ரோச் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடைவதைத் தவிர்த்தனர்.

இந்த இணைப்பாட்டமானது டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் பதிவான அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாகும்.

அத்துடன் கடைசி இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் 385 ஓட்டங்களைக் குவித்தது.

இது டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.

இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிராக 1973இல் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் நியூஸிலாந்தினால் பெறப்பட்ட 310 ஓட்டங்களே கடைசி இன்னிங்ஸில் பெறப்பட்ட முந்தைய சாதனையாகும்.

மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் கெமர் ரோச் 233 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

au

“பாதுகாப்பு மையங்களில்” உள்ள இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் உதவி

December 7, 2025

வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டு தற்போது “பாதுகாப்பு மையங்களில்” உள்ள இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் “செயல்படுத்தப்பட்ட துணை ஊட்டச்சத்து உணவாக”

bst

சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்த கால்நடை விபரம்!

December 7, 2025

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் ​ சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,000 கோழிகளும் 400 மாடுகள் 400 ஆடுகள்

cir

நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கப்பலில் வந்த கள்ள சிகரெட்டுகள்

December 7, 2025

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு

photo-collage.png (5)

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு; அமெரிக்க விமானப்படையின் C-130 விமானங்கள் இலங்கையை வந்தடைந்தன

December 7, 2025

அமெரிக்க விமானப்படையின் சி-130 ரக விமானங்கள் ‘தித்வா’ சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக இஇலங்கையை வந்தடைந்தன. ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில்

crim

67 வயதான கணவரை உலக்கையால் தாக்கி; கொன்ற மனைவி

December 7, 2025

பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்

ja hind

யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் – நீதிமன்றம்

December 7, 2025

யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் – நீதிமன்றம் யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட

1751730278-rice-hjg-L

அரிசியை வாங்கும் போது அவதானமாக இருங்கள்

December 7, 2025

வெள்ளத்தால் சேதமடைந்த அரிசி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக இருந்த நிலையில் அவை சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு விடப்பட்ட ஒரு மோசடியை

sama

மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது – சாமர சம்பத்

December 7, 2025

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு பின்னர் மக்கள் ஏற்படுத்தி கொண்ட நல்ல அரசாங்கம் இது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்

tu

சுற்றுலாப் பயணிகளின் மனிதாபிமான உதவிகள்…

December 7, 2025

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் வழமை நிலைக்கு திரும்பும் வகையில் மக்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் சேதங்களுக்கு உள்ளான

Education

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்…

December 7, 2025

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில்

juvan

இலங்கை மக்கள் குறித்து கனேடிய தமிழ் எம்பி முன்வைத்த கோரிக்கை!

December 7, 2025

இலங்கைக்கு வலுவான ஆதரவை கனடா வழங்க வேண்டும் என்று தமிழ் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் அழைப்பு விடுத்தார்.

ditva_4

சுனாமியை விடவும் 10 மடங்கு பொருளாதார அழிவை புயல் ஏற்படுத்திவிட்டது?

December 7, 2025

தித்வா புயல் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்பை விடவும் பத்து மடங்கு அதிகம் என