விலகிச் சென்றவர்களை மீண்டும் அரவணைக்கும் நோக்கு; டிசம்பர் 6 ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாநாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) செயலாளர் துமிந்த திசாநாயக்க அவர்கள், இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எதிர்வரும் கட்சி மாநாடு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பல முக்கிய கருத்துக்களை வெளியிட்டார்.

மனவருத்தங்கள் காரணமாக கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் அரவணைக்கும் நோக்குடன், டிசம்பர் 6ஆம் திகதி அனுராதபுரத்தில் கட்சி மாநாட்டை நடத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி திட்டமிட்டுள்ளது.

துமிந்த திசாநாயக்க இது குறித்துக் கூறுகையில், “எங்களுக்குள் இருக்கும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகளையும் மனக்கசப்புகளையும் மறந்து, மனவருத்தத்துடன் இருக்கும் அனைவரும் சமாதான இல்லத்திற்கு வருமாறு மீண்டும் ஒருமுறை அழைக்கின்றோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான தலைமையில் ‘பொய் போதும்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

‘இளவரசர்களை’ உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவில்லை

அரசியல் வாரிசுகள் உருவாக்கப்படுவதை நிராகரிக்கும் தொனியில் பேசிய துமிந்த திசாநாயக்க, “துமிந்த திசாநாயக்க ‘இளவரசர்களை’ உருவாக்க மாட்டார்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், “சக்திவாய்ந்தவர்கள் வராதபோது பழைய முகங்கள் என்று பேசுவார்கள். அதனால், தலைவர்களுடன் இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கமும் மக்களின் மனமாற்றமும்

சமீபத்தில் கூட்டு எதிர்கட்சிகள் நடத்திய கூட்டத்தில், ஏமாற்றமடைந்த மக்களே அதிகளவில் கலந்துகொண்டதாக திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், “எங்கள் ஆட்சியின் கீழ் வேலைவாய்ப்பு, கிராமத்திற்கு தண்ணீர், பாடசாலை, வீதி, மின்சாரம் போன்ற வசதிகளைப் பெற்ற மக்கள் தற்போது வேறு விதமாகத் தீர்மானம் எடுப்பதைப் பற்றி எங்களுக்குக் கோபமும் இல்லை, சந்தேகமும் இல்லை. பொதுவாக இந்த நாட்டு மக்கள் அவ்வாறு மாறுகிறார்கள்.
அதிகாரத்தைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை வழங்கிய இந்த அரசாங்கத்திற்கு, அவற்றை நிறைவேற்ற எந்த அவசியமும் இல்லை. இந்த அரசாங்கம் பொய்களின் அடிப்படையிலேயே இயங்குகிறது.”

டில்வின் சில்வாவுக்குப் பதில்

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) செயலாளர் டில்வின் சில்வா பற்றிய கருத்துக்குப் பதிலளித்த துமிந்த திசாநாயக்க, “டில்வின் சில்வாவுக்கு நாங்கள் எதிரிகளாக இருக்கலாம், ஆனால் டில்வின் சில்வா எங்களுக்கு எதிரி அல்ல. வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட கட்சிகள் இருக்கலாம், ஆனால் கட்சிகள் ஒருபோதும் எதிரிகளாக இருக்க முடியாது. நீங்கள் (டில்வின் சில்வா) எவ்வளவுதான் எதிரிகளை மன்னிக்க மாட்டேன் என்று சொன்னாலும், டில்வின் சகோதரர் இன்றும் எனக்கு சகோதரர்தான்,” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “நாங்கள் யாருடைய காலையும் வார மாட்டோம். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அண்மையில் டில்வின் சில்வாவின் லண்டன் விஜயத்தின் போது அவருக்கு தமிழ் டயஸ்போராக்களின் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதுவும் ஒரு நாடகமா என்று எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் இங்கு தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை என்பிபி அரசாங்கம் நிறைவேற்ற வில்லை என்று தான் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அப்படியானால் தமிழ் டயஸ்போராக்களின் ஆதரவிற்காக பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டனவா? அல்லது தமிழர்களை இவர்கள் ஏமாற்றுகின்றனரா? கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொது தேர்தலிலும், தமிழர்களின் கணிசமான வாக்கு இந்த அரசாங்கத்திற்கு கிடைத்திருந்தாலும், பின்னர் வந்த உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்திற்கான ஆதரவு மிகக் குறைவானதாகவே காணப்பட்டது. இதிலிருந்து தமிழர்கள் தமது நிலைப்பாட்டை எவ்வாறு உணர்ந்துள்ளனர் என்பதை தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவே, டில்வின் சில்வாவுக்கெதிரான இந்த லண்டன் ஆர்ப்பாட்டமானது ஒரு கண் துடைப்பா? அல்லது நாடகமா? என என் பி பி அரசை கேட்கின்றோம் என்று மேலும் தெரிவித்தார்.

By C.G.Prashanthan

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்

Anusa

யாழ். இளைஞர் அனுசன் சர்வதேச ரீதியில் வெற்றியாளராக தெரிவு

December 6, 2025

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant

fa

அறவழியில் போராட்டம்; தையிட்டி விகாரையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிட்டவில்லை – அருட்தந்தை சத்திவேல்

December 6, 2025

தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை

anu

அனர்த்த மரண எண்ணிக்கை தொடர்பாகப் பொய்த் தகவல் கூறிய எம்.பிக்கு எதிராக வழக்கு

December 6, 2025

நாடாளுமன்றத்தை தவிர்த்து வெளியில் போலியான பிரசாரம் முன்வைக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் என்று ஜனாதிபதி அநுர

co

கொலன்னாவ பகுதியில் பாரிய நெருக்கடி…

December 6, 2025

மெகொட கொலன்னாவ பகுதியில் வெள்ளம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட

de

கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல்; 09 பேருக்கு அபராதம்

December 6, 2025

யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம்