விஜய் யாருக்காக கட்சி துவங்கினார் – திருமா

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு கொடுத்து வருகிறது திமுக. இதனிடையில் இன்னமும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அழைப்பு வரவில்லை. இந்நிலையில் இதுக்குறித்து பேசியுள்ள திருமாவளவன் எம்பி, விஜய் பற்றியும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் சந்திப்பில் பேசிய விஜய், எப்போதும் போல் திமுக, தவெக இடையில் தான் போட்டி என தெரிவித்தார். அத்துடன் திமுகவை கடுமையாக விமர்சித்தவர், அறிவாலயத்தில் நிழலுக்கு ஒதுங்குபவர்களை எல்லாம் வைத்து கூட்டணியை உருவாக்கி இருப்பதாகவும் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு தவெக தொண்டர்கள் பயர் விட்டு வரும் நிலையில், பிறக்கட்சியை சேர்ந்தவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, தவெக விஜய்யின் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தவர் தவெக விஜய் பற்றி கூறுகையில், அவருக்கு தோணுவதை பேசுகிறார். எழுதி கொடுப்பதை வாசிக்கிறார். திமுக எதிர்ப்பை மட்டுமே அரசியலாக பேசுகிறார். இதுவரைக்கும் ஐந்து தலைவர்களை கொள்கைகளாக ஏற்றுக் கொண்டதாக சொன்ன அவர், அந்த தலைவர்களின் கொள்கை கோட்பாடுகள் என்ன என்பதை தன்னுடைய தலைமையை ஏற்று வருகிற தொண்டர்களிடம் விளக்கியதாக தெரியவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் வந்தால் நாங்கள் என்ன செய்வோம் என்பதை கூட விஜய் சொன்னதாக தெரியவில்லை.

அவர் கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரைக்கும் ஒரே அஜெண்டா மட்டும்தான் விஜய்யின் செயல் திட்டமாக இருக்கிறது. திமுக எதிர்ப்பு. திமுக எதிர்ப்பு மட்டுமே. அது அவருக்கான அரசியல் என்பது மாற்றுக்கருத்து இல்லை. அவர் திமுகவை எதிர்க்கட்டும். ஆனால் விஜய்யின் பார்வை என்ன என்பதை இன்றுவரை நம்மால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எதற்காக கட்சி துவங்கினார்? யாருக்காக கட்சி துவங்கினார்? எந்த இலக்கை நோக்கி அவர் பயணிக்கிறார். எந்த செயல் திட்டத்தை செயல்படுத்த போகிறார்? என திருமாவளவன் கூறியுள்ளார்.

pe

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நுவரெலியாவில் மூடல்?

March 3, 2026

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றுக் காலை முதல் மூடப்பட்டுள்ளன.

crude

5 நாட்களில் 82 டொலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

March 3, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்

ha

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

March 3, 2026

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு

inla

ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

March 3, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

up

தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

March 3, 2026

கொட்டகலை, யுலிபீல்ட் தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக குறித்த தோட்டத் தொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த

Suresh orema

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிக்க உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

March 3, 2026

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக

Thumi_1

இன்று நாட்டில் அரசியல் இலாபத்திற்காகவே மத – இன அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன – துமிந்த நாகமுவ

March 3, 2026

இன்று நாட்டில் பெரும்பான்மையாகச் சிங்கள பௌத்தர்கள் இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை

ud

குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்க விமானங்கள் சுடப்பட்டதா?

March 3, 2026

வைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் தவறுதலாகச் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க

arrest

போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

March 3, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (02)

death-pictures-4i5d2eg6pdb913xl

யாழ் குடத்தனையில் இளைஞன் தற்கொலை?

March 3, 2026

யாழ்ப்பாணம், குடத்தனை வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் உயிரை மாய்த்துக்

Duba

மூடப்பட்டிருந்த டுபாய் விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

March 3, 2026

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான

Mano

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் – மனோகணேசன்

March 2, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி