விஜய் உயிருக்கு ஆபத்து? நேரடியாக களத்தில் இறங்கிய சிஆர்பிஎஃப் தலைமை அதிகாரி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக சி.ஆர்.பி.எஃப் தலைமை டிஜிபி மற்றும் கமாண்டன்ட் ஆகியோர் அவரது வீட்டில் நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை தமிழக அரசிடமும், தமிழக வெற்றிக் கழகத்திடமும் எழுப்பி இருந்தது.

இதனிடையே, தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விஜய்க்கு பாதுகாப்பு வழங்கி வரும் ஓய் பிரிவு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருந்தது.

தற்போது, விஜய்க்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படுகிறதா, கரூர் பிரச்சாரக் கூட்டத்தின் போது, விஜய்க்கு எந்த அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, அப்போது, விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை உள்துறை அமைச்சகம் எழுப்பி இருந்தது.

இதற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், விஜய்க்கான பாதுகாப்பு போதுமா அல்லது அதிகரிக்கப்பட வேண்டுமா? என்று முடிவெடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஓய் பிரிவு பாதுகாப்புக்கு பதிலாக ஒய் ப்ளஸ் அல்லது அதற்கு மேலாக இசட் பிரிவு பாதுகாப்பை அதிகரிக்க சிஆர்பிஎஃப் தரப்பிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு சிஆர்பிஎஃப் தலைமை டிஜிபி சஞ்சய் குமார், பெங்களூரு சிஆர்பிஎஃப் கமாண்டன்ட் மனோஜ் குமார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் 15 நிமிட ஆய்வுக்குப் பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த அதிகாரிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்