வாயில்லா ஜீவன்களை துஷ்பிரயோகப்படுத்திக் கொலைசெய்து வந்த கனடா தம்பதி!

கனடாவை சேர்ந்த தம்பதியினர், விலங்குகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் காணொளிகளை உருவாக்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணொளிகளை அவற்றை ஒரு செய்திப் பரிமாற்ற செயலி மூலம் விற்ற வழக்கில், பல விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலில் 90 க்கும் மேற்பட்ட பூனைகள், பறவைகள் மற்றும் ஆக்சோலாட்டல் போன்ற விலங்குகள் சம்பந்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 2024 இல், கால்நடை மருத்துவருக்கு கிடைத்த தகவல் மூலம் இந்தத் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

‘Goddess May Barefoot Premium Crush’ என்ற பெயரில் 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட டெலிகிராம் குழுவில், விலங்குகளை நசுக்கிக் கொல்லும் காணொளிகள் விற்கப்பட்டதாகவும் பகிரப்பட்டதாகவும் அரச குற்றவியல் சட்டத்தரணி பாய்ட் மெக்கில் வினிபெக் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வெறுங்கால்களால் விலங்குகளை நசுக்கிக் கொன்றதாகவும், அதைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும், அதில் பெரும்பாலும் பாலியல் ரீதியான அம்சங்கள் இருந்ததாகவும் மெக்கில் கூறினார்.

இந்தக் காணொளிகள் ‘டார்க் வெப்’பில் வெளியிடப்பட்டதாகவும், விலங்குகளைக் கொல்வதற்கான விலைப் பட்டியலும் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் ஒரு சிறிய எலிக்கு 5 டொலர் முதல் மூன்று பூனைக் குட்டிகள் கொண்ட குடும்பத்திற்கு 180 டொலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குற்றவாளிகள் இருவரும் தலா ஆறு விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். குற்றவாளிகளின் மின்னணு சாதனங்களைப் பரிசோதித்ததில், விலங்குகள் கொல்லப்படும் பல காணொளிகள் மற்றும் அவர்களின் நடத்தையை அதிகரிக்கத் திட்டமிடுவது தொடர்பான உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட லிமாவின் நாட்குறிப்பில், “தனது கால்களால் உயிர்களைக் கொல்வது எவ்வளவு பிடிக்கும், அது தனக்கு அளிக்கும் இன்பம்” குறித்தும் எழுதப்பட்டிருந்தது.

மே 2024 முதல் ஒக்டோபர் 2024 வரை இந்தக் காணொளிகள் மூலம் சுமார் 2,800 டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

சட்டத்துறையினர் மதிப்பாய்வு செய்த ஆதாரங்களில், 60-க்கும் மேற்பட்ட பூனைகள், ஏழு பறவைகள், ஆறு முயல்கள், ஒரு தவளை மற்றும் ஒரு ஆக்சோலாட்டல் உட்பட 97-க்கும் மேற்பட்ட விலங்குகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

தம்பதிகள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்படும் முந்தைய தண்டனை அறிக்கைகள் முடிவடைந்த பிறகு, அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் தெரிவிக்கப்படுகின்றது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த