வாபஸ் பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்

லஞ்சம் ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் வாபஸ் பெறப்பட்ட 102 வழக்குகளில், 65 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2019 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் ஆணைக்குழு மொத்தமாக 102 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவற்றை மீளாய்வு செய்த பின்னர் 65 வழக்குகள் மீண்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாபஸ் பெறப்பட்ட வழக்குகளில் மேலும் 3 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்வது குறித்து தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அஜித் பி. பெரேரா, மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பெரும் சொத்துகள் மற்றும் பெரிய தொகை பணம் தொடர்புடைய வழக்குகள் எதுவும் இல்லை என என சுட்டிக்காட்டியுள்ளார்.

தரம், பதவி பார்க்காமல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதெனில் அது எவ்வாறு சாத்தியமாகும் எனத் தாம் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், தொடர்புடைய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்ட போதிலும், தற்போது அவர் ஜனாதிபதி பதவியில் இல்லாத நிலையில் ஏன் அந்த வழக்கு மீண்டும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அஜித் பி. பெரேரா கேள்வி எழுப்பினார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, தமது அரசு தரம், பதவி எதையும் பொருட்படுத்தாமல் சட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேக்கு எதிராகவும் எந்தத் தரப்பையும் பார்க்காமல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை