வழக்கிலிருந்து தப்பிக்க அதிபரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டு, அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தனித்தனி வழக்குகளை சந்தித்து வருகிறார்.

இஸ்ரேல் வரலாற்றில் பதவியில் இருக்கும்போது வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் ஒரே பிரதமர் நெதன்யாகு ஆவார். அவர் இன்னும் எந்த வழக்கிலும் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

இந்த வழக்குகள் நாட்டை பிளவு படுத்துவதாகவும், விசாரணையை உடனடியாக முடிப்பது தேசிய நல்லிணக்கத்தை மீட்டெடுக்க உதவும் என்றும், வீடியோ ஒன்றில் நெதன்யாகு கூறியிருந்தார்.

மேலும், வாரத்துக்கு மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பதால், தன் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இதன் காரணமாக, தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டு, அந்நாட்டு அதிபர் அலுவலகத்தில் பொது மன்னிப்பு கோரிக்கை, பிரதமர் அலுவலகம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சட்ட மற்றும் நீதித்துறை கருத்துக்களை பெற்ற பின், பொறுப்புடனும், நேர்மையுடனும் இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் அதிபர் ஐசக்குக்கு எழுதிய கடிதத்தில், நெதன்யாகுவுக்கு உடனடியாக மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்த நிலையில், மன்னிப்பு கோரியுள்ளார் நெதன்யாகு.

பொதுவாக இஸ்ரேலில் தண்டனை வழங்கப்பட்ட பின்னரே மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம்.

இருப்பினும், குற்றம் நிரூபிப்பதற்கு முன்பே மன்னிப்பு வழங்குவது அரிதான மற்றும் விதிவிலக்கான நடவடிக்கையாகும் என்றும், இது நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றும் எதிர்க்கட்சியினர் மற்றும் சட்ட வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும், குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும், வருத்தம் தெரிவிக்காமலும் மன்னிப்பு கோருவது சட்ட விரோதமானது என எதிர்க்கட்சி தலைவர்கள் வாதிடுகின்றனர்.

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க