வலி. வடக்கு இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடன் நிறுத்துமாறு தவிசாளர் அதிரடி உத்தரவு!

வலி. வடக்கு இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடன் நிறுத்துமாறு தவிசாளர் அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணம், வயாவிளான் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து, எவ்வித சட்டப்பூர்வ அனுமதியுமின்றி அமைக்கப்பட்டு வரும் இராணுவ மருத்துவமனைக் கட்டுமானங்களை உடனடியாக நிறுத்துமாறு வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ. சுகிர்தன், யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதிக்குக் கடுமையான கட்டளை ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
வயாவிளான் பகுதியில் உள்ள மக்களின் தனியார் காணிகளை உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவத்தினர் நீண்டகாலமாகத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில், பிரதேச சபையின் எவ்வித அனுமதியுமின்றி அங்கு சட்டவிரோதமாக இராணுவ மருத்துவமனை ஒன்றின் கட்டுமானப் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டு, கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு இராணுவத் தரப்பிற்குத் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த உத்தரவுகளையும் மீறி இராணுவத்தினர் தொடர்ந்து கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே, வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ. சுகிர்தன் இந்த அதிரடி அறிவித்தலை அனுப்பியுள்ளார். அந்த அறிவித்தலில், எதிர்வரும் புதன்கிழமைக்குள் இந்தச் சட்டவிரோதக் கட்டடங்கள் அனைத்தும் இடித்து அகற்றப்பட வேண்டும் அல்லது உரிய உள்ளூராட்சி அமைப்பிடம் முறையான அனுமதி பெறப்பட வேண்டும் எனத் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில், யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதிக்கு எதிராகப் பிரதேச சபைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி, இந்த அறிவித்தலின் பிரதிகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான